Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

அறிந்து கொள்வோம்

வன்னி மண்ணில்.. சொகுசு SOFA கதிரை தொழிற்சாலை.

  • February 14, 2022
  • 0 Comments

இன்றைய காணொளியில் ஈழத்து வன்னி மண்ணில் இயங்கும் KMT sofa தொழிற்சாலையை காண்பித்து உள்ளேன் தொடர்புகளுக்கு: KMT sofa – 0775102378.

ஊர் புதினம்

உடுப்பிட்டி வடக்கை சேர்ந்த விறாச்சி குளத்தில்‌ முதலைகளின்‌ நடமாட்டம்‌??

  • February 13, 2022
  • 0 Comments

உடுப்பிட்டி வடக்கை சேர்ந்த பிரதேசத்திலுள்ள விறாச்சி குளத்தில்‌ அண்மைக்காலமாக முதலைகளின்‌ நடமாட்டம்‌ அதிகரித்துக்‌ காணப்படுகின்றது. இது தொடர்பாக கெருடாவில்‌ கிழக்கு கமக்கார அமைப்பால்‌ எச்சரிக்கை சுவரொட்டிகள்‌ நாலாபுறம்‌ காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில்‌வெளியே வந்த முதலை ஒன்று நேற்று இரவு (12.02.2022) பொக்கணை சந்திப்பகுதியில்‌ கடும்‌ பிரயத்தனத்தின்‌ மத்தியில்‌ ஊர்மக்களால்‌ மடக்கி பிடிக்கபட்டு வன ஜீவராசிகள்‌ திணைக்களத்திடம்‌ ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். […]

ஊர் புதினம்

இவர்களை போற்றுவோம்!

  • February 13, 2022
  • 0 Comments

2020ம் ஆண்டு நடைபெற்ற பொதுப் பரீட்சைகளில் யா/கம்பர்மலை வித்தியாலயம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. 2020ம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 பலமைப்பரிசில் பரீட்சையில் 7 மாணவர்கள் வெட்டும் புள்ளிக்கு மேல் பெற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். கரவெட்டி கோட்ட மட்டத்தில் 1ம் மற்றும் இரண்டாம் இடங்களை கம்பர்மலை வித்தியாலயம் பெற்றுள்ளது. சித்தியடைந்த மாணவர் விபரம் வருமாறு: 1. கணேசலிங்கம் கஜானன் 192 புள்ளிகள் 2. செந்தில்நாதன் துவாகரன் 191 புள்ளிகள் 3. ஜெயந்தன் […]

அறிந்து கொள்வோம் கட்டுரைகள்

எறும்புகள்-ஆய்வுக்கட்டுரை காக்கை சிறகினிலே சஞ்சிகையிலிருந்து

  • February 10, 2022
  • 0 Comments

இயற்பியல் மையக் கோட்பாட்டின் அடிப்படையில், முதலில் பூமி தோன்றியது. அதன்பிறகு, பூமியில் உயிர்கள் தோன்றின. அப்படித்தோன்றிய உயிர்கள் இன்று வரையிலும் நிலைபெற்றிருப்பதற்கு, ‘இனப்பெருக்கமே’ காரணம். இனப்பெருக்கத்திற்கு அடிப்படையாக அமைவது ‘ஆண்-பெண்’ உறவு. தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆகிய அனைத்து உயிரினங்களிலும், ஆண், பெண் இனங்கள் உண்டு. ஆண்-பெண் உறவு கொள்வதன்வழியே, ஆணின் விந்தணு, பெண்ணின் கருப்பையை அடைந்து, இனப்பெருக்கம் நடைபெறுகிறது. விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இது பொதுவானது. தாவரங்களில், ஆண்-மகரந்தம், பெண்- சூல்பையில் விழும்போது, சூலுற்று, பிஞ்சாகி, காய்த்து, […]

வரலாற்று காணொளிகள்

குமரிக்கண்டம் எப்படி அழிந்திருக்கும்?The Lost Continent of Kumari Kandam

  • February 10, 2022
  • 0 Comments

தமிழர்களின் ஆதி இடம் என்று கருதப்படும் குமரிக்கண்டம் எவ்வாறு அழிந்தது? என்பதை நிரூபிக்கும் வகையில் பல கதைகள் இருக்கின்றன. குமரிக்கண்டம் மட்டுமல்ல ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கதைகள் இருக்கின்றன. கடலால் எப்படி நாடுகள் அழிந்தன என்பது பற்றிய பதிவு இது! இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். இந்த இணையத்தில் வரும் தகவல்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள்.உங்கள் கருத்துக்களை […]

படைப்பாக்கம்

சென்னையே போய்வருகிறேன்……..சிறுகதை

  • February 10, 2022
  • 0 Comments

காமாட்சி மேன்சன். திருவல்லிக்கேணியில் வாலாஜா சாலையிலிருந்து செல்லும் ஒரு சந்தில் உள்ளே போய் இரண்டு மூன்று குறுக்கு சந்துகள் கடந்து சென்றால் வரும். அதிகாலை சத்தம். அது சேவல் கூவுவதோ, காகம் கரைவதோ, சிட்டுக்குருவி கீச் கீச்சிடுவதோ அல்ல. தெருக்குழாயில் தண்ணி அடிக்க முந்துவதில் சண்டை, தேநீர்க்கடையில் அலறும் பாட்டு, நெரிசலான சந்தில் வேகமாகச் செல்ல முயலும் டூ வீலர் ஹாரன், யாரோ யாரையோ அடிக்க அழுகை. பலவிதமான சத்தங்கள், தங்கராசுவை எழுப்பி விட்டது. பக்கத்தில் படுத்திருந்த […]

தாயகத்து படைப்புகள்

எங்கட ஊர் | Engada Oor

  • February 8, 2022
  • 0 Comments

முடிந்தால் இந்தப் பாடலை ஒரு முறை கேட்டுப் பாருங்களேன்…இது உங்கள் சிறு வயது நினைவுகளை மீட்டுத் தரும்.நீங்கள் ஓடி விளையாடிய ஊருக்கு உங்களை அழைத்துச் செல்லும்.. இந்தப் பாடல் எங்கள் மண்ணில் பூத்த மலர்… பாடியவர் கோகுலன் சாந்தன், எங்கள் மண்ணின் பாடகர் சாந்தனின் மகன். பாடல் நாயகனாக நடித்திருப்பவரும்அவரே… எங்கள் மண்ணில் இருந்து இதுபோன்ற படைப்புகள் இன்னும் இன்னும் வெளிவர உங்கள் ஆதரவு கைகொடுக்கட்டும். Music Composer & Arrangements – Isaipiriyan Vocals : […]

உடல் நலம்

குப்பையில் கிடக்கும் கோமேதகம் (குப்பைமேனி)

  • February 8, 2022
  • 0 Comments

மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்துவிட்டனர்… கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்! அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்… இந்த இதழில் வீதியெங்கும் விளைந்து கிடக்கும் குப்பைமேனி பற்றி அறிந்து […]

கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 05 : T .சௌந்தர்.

  • February 8, 2022
  • 0 Comments

மரபும், வாத்திய இசைவார்ப்புகளும்: 1950  களில் மெல்லிசைப்பாங்கில் தங்கள் தனித்துவத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிப்படுத்திய  மெல்லிசைமன்னர்கள் பாகப்பிரிவினை, மாலையிட்ட மங்கை  பாடல்களால் தனிக்கவனம்  பெற்றார்கள் என்று சொல்லலாம்.பதிபக்தி , தங்கப்பதுமை போன்ற படங்களில்  தெறித்த மெல்லிசை உருவ அமைப்பு முழுமையாக ஹிந்தி திரை இசைக்கு நெருக்கமாக மாறி  தமிழ் திரையிசையை முன்னோக்கி  நகர்த்தியது. ஒப்பீட்டளவில் 1950 களைவிட 1960  களில்  சமூகக்கதைகள்  திரையில் இடம் பிடிக்க ஆரம்பித்ததும் பாடல்களிலும் , இசையமைப்பிலும் உணர்வுகளை  கதைகளுக்கு பொருத்தமாக வெளிப்படுத்தினார்கள்.காதல் […]