“ஒரு பிஞ்சின் ஏக்கம்”
தூங்கிப் பல நாட்களாகிச்சோர்ந்திருக்கும் நெஞ்சிலேஊர வந்த காற்றிலேசேர்ந்து வந்த தாலாட்டிலேநெஞ்சுருக மெய் சிலிர்த்துதன்னையே தான் மறந்துஎங்கோ ஒரு பாயிலேகன்னமதில் நீர் வழியச்சொந்தங்களின் துணை தேடும்அங்கு ஒரு பிஞ்சின் ஏக்கம்உங்களுக்குத் தெரிகின்றதா? அரை குறை உணவோடுநிறை காணா வயிற்றோடுபஞ்சான உடைதன்னால்பிஞ்சான உடல் போர்த்துபெற்றவர் தரும் பாசத்தினைமற்றவர் பாய்தனில் தேடிவெறுமையை மனஞ்சுமக்கதாயின்றித் தந்தையின்றிதனிமையோ நிலமையெனத்தவித்துக் கலங்கி நிற்கும்அங்கு ஒரு பிஞ்சின் ஏக்கம்உங்களுக்குத் தெரிகின்றதா? என்றாவது ஒரு நாளில்யாராவது ஒரு வள்ளல்சுவை கொண்ட பாயாசம்பசி தீர ஊற்றிவிட்டுஅத்தோடு அவர் போகஉண்டியற்று நாள் […]




