Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

கட்டுரைகள் நம் ஊர் பெரியோர்கள்

விம்பம்

  • February 23, 2022
  • 0 Comments

ஆசை இராசையா  Asai Rasiah 1946 – 2020 ஈழத்து ஓவியர்கள்சார் பதிவுகள் வேற்றுமொழிகளிலும் பிரசுரமாவதை காணமுடிகிறது சமகாலங்களில்.  மேலும் தமிழ் ஓவியர்களது ஆவணங்கள் தேடப்படுகின்றன, பிரசுரமாகின்றன. அதன் தொடர்ச்சியாக ஓவியர் ஆசை இராசையாவின் விம்பம் என்ற தலைப்பிலான ஓவிய நூல் முக்கிய ஆவணமாகிறது.  இலையுதிர் காலமொன்றில் பாரிசில் இரு ஆண்டுகளுக்கு முன் வார இறுதி நாளொன்றின் அதிகாலைநேரம் யன்னலை லேசாக திறந்தேன் குளிர்காற்றும் இளம் சூரியக்கதிர்களும் முகத்தில் விழுந்தன. அரேபிய கோப்பியருந்தியபடி கொழும்பில் இருந்து வெளிவரும் […]

கட்டுரைகள்

பிப்ரவரி 21சர்வதேச தாய்மொழி தினம்

  • February 22, 2022
  • 0 Comments

எம். ஏ. நுஃமான் தமிழ்மொழி எங்கள் தாய் மொழிஇந்த அரசியல் , சமூக, பண்பாட்டு , அடிப்படை உரிமையின் முக்கியத்துவத்தினையும் ,இதில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என்பதை தெளிவாக உரைக்கும் பதிவு இது … மொழி ஒரு சமூகத்தின் சமூக-பண்பாட்டு அரசியல் வாழ்வுடன் மிக நெருக்கமான உறவுகொண்டுள்ளது. கோட்பாட்டு மொழியியலாளர் வரையறுப்பதுபோல அது முற்றிலும் ஒரு தொடர்பாடல் ஊடகம் மட்டுமல்ல. அது ஒரு சமூகத்தின் தேசிய அல்லது இனத்துவ அல்லது பண்பாட்டு அடையாளமாகவும் மாறுகின்றது. அது மக்களை […]

கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் 07 : T .சௌந்தர்.

  • February 22, 2022
  • 0 Comments

இனிய வாத்தியக்கலவைகளும் , பல்வகை ஒலிநயங்களும். மரபிசையோடு இயைந்த மெட்டுக்களை சிறப்பாக அமைக்கக்கூடிய முன்னோடிகளான ஜி.ராமநாதன், எஸ்.எம்.சுப்பைய்யாநாயுடு ,வி. வெங்கட் ராமன் , கே.வி.மகாதேவன் போன்றவர்களின் பாடல்களிலிருந்து மெல்லிசைமன்னர்களின் வித்தியாசமானதாக , புதுமையாக இருப்பதை நாம் காண்கிறோம்.முன்னோடிகளின் மெட்டுக்கள் இனிமையாக இருப்பினும் வாத்திய அமைப்பில் போதாமையையும் காண்கிறோம்.  மெல்லிசைமன்னர்களின் இசை வசீகரத்தின் ஆதாரமே புதிய, புதிய இசைக்கருவிகளை மிக நுட்பமாக பயன்படுத்தியது தான் என அடித்துக் கூறலாம்.எளிமையும் ,கவர்ச்சியும் வனப்பும் ,கனிவும் மிக்க மாயக்கலவையாக அவர்களது இசை இருந்தது. […]

தொழில் நுட்ப தகவல்கள்

மைக்ரோவேவ்(micro wave)அடுப்பு :இது எப்படி வேலை செய்கின்றது??

  • February 19, 2022
  • 0 Comments

இன்றைய கால கட்டத்தில் மைக்ரோவேவ் அடுப்பு என்பது நிறைய வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் ஒரு அடுப்பு ! உணவை சூடு படுத்துவதற்கு , இந்த அடுப்பை உபயோகிப்பதே மிக பொருத்தமாக இருக்கும். ஏனெனில், இந்த அடுப்பு, பாத்திரத்தை சூடு படுத்தாமல் , நேரடியாக உணவை சூடு படுத்தி விடுகின்றது! விந்தையாக இருக்கிறது அல்லவா! இவ்வாறு நேரடியாக உணவு சூடு படுத்தப்படுவதால் , உணவின் சுவை மாறுவதில்லை. அது போக, நாம் சூடு படுத்த உபயோகித்த பாத்திரத்தில், உணவு பிடித்த தடயம் […]

படைப்பாக்கம்

ஊரும் உறவும்-இலட்சியக்குறிக்கோள்

  • February 16, 2022
  • 0 Comments

செந்தமிழில் நாசுவைக்க பொங்கு தமிழ் பொங்கிவரசாதி மத பேதமின்றி ஊரும் உறவும் ஒன்றுபட்டால்மேம்படுமே மனித நேயம்;சிந்தித்து செயற்பட்டால் யாவுமே சிறப்பாகும்.ஊருண்டு வளமுண்டு பேருண்டு, உறவுகள் பல உண்டு;ஊர்கள் பல உறவுகளும் பல, இருந்தும் சிதறிக்கிடக்கிறோம் உலகெங்கும்;ஊர்கள் மாறலாம் உறவுகளும் மாறலாம், மாறுமோ நம்பிணைப்பு;வேற்றுமை பல உண்டு ஓற்றுமை சில உண்டு;வேற்றுமையை புரிவதும், ஒற்றுமையை உணர்வதும் நம் ஆற்றலின் திறமையே;வேற்றுமையிலும் ஒற்றுமை உண்டு, ஓற்றுமையிலும் வேற்றுமை உண்டு;இல்லாதவர் பலர் உண்டு, இருப்பவர் சிலர் உண்டு;வாழத்துடிப்பவர் பலர் உண்டு, வாழவைப்பவர் […]

துயர்பகிர்வோம்

சின்னத்துரை தவராசா-இறுதிகிரிகை நேரடி காணெளியாக இணைக்க பட்டுள்ளது

  • February 15, 2022
  • 0 Comments

சின்னத்துரை தவராசா அவர்கள் இன்று (15.02.2022 )இயற்கை எய்தினார் இவர் கொம்மந்தறையை சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்துரை சின்னம்மாவின் மகனும் இணுவிலை சேர்ந்த காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளையின் மருமகனும் கமலேஸ்வரியின்(கிளி) கணவரும், சபாரத்தினம் (காலஞ்சென்ற), துரைச்சாமி (காலஞ்சென்ற),சின்னராசா (காலஞ்சென்ற), இரத்தினம்மா(காலஞ்சென்ற), தம்பிராஜா (காலஞ்சென்ற) , சிவசாமி ஆகியோரினது சகோதரனும், குணரத்தினம் (காலஞ்சென்ற), பண்டிதர் ச.வே பஞ்சாச்சரம், பரமேஸ்வரி, ஞானேஸ்வரி, ஈஸ்வரி, வைகுந்தவாசனதும் மைத்துனரும், யோகச்சந்திரன், யோகராஜா, பகீரதன், மேகலா, பார்த்தீபன் ஆகியோரினது தகப்பனும், ரஜனி, சிவகுமாரி, அனுசா, சுரேந்திரன், […]

கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 06 : T .சௌந்தர் 

  • February 14, 2022
  • 0 Comments

வாத்தியங்களும் , புதுப்பாய்ச்சலும் அமெரிக்க ஹொலிவூட் திரைக்கு சிறப்பான இசைமரபைக் கொண்ட ஐரோப்பிய இசைக்கலைஞர்கள் கிடைத்தது போல தமிழ் திரைக்கு பழமை மீறி  புதுமை பாய்ச்சும் இசைக்கலைஞர்கள் கிடைக்கவில்லை.  இசையின் மீது தீராக்காதலும்    , திரையிசை குறித்த நற்கனவுகளையம் கொண்ட மெல்லிசைமன்னர்கள் அந்த பாரிய பொறுப்பை சுமக்க முனைந்தனர். 1950  மற்றும் 1960    களின் ஆரம்பகாலத் திரைப்படங்களில் பின்னணி இசையின் ஒரு விதமான போக்கு நிலவியதை நாம்  காணலாம். அக்காலப்படங்களின் பின்னணி இசையை கூர்ந்து கவனிக்கும் ஒருவர் […]