காத்திருப்பு – சுடரி குட்டிக்கதை
தினமும் அந்த பேரூந்து தரிப்பிடத்திற்கு நூற்றுக்கணக்கான மக்கள் வந்து சென்றவண்ணமே இருக்கின்றனர். ஆனாலும் ஒருவர் கண்ணில் கூட படவில்லை, கண்களில் ஏக்கத்தோடு அங்கு வருபவர்களின் முகத்தில் தன்மீதான கருணை உள்ளம் கொண்டவரை தேடிக்கொண்டிருக்கும் அந்த குட்டி நாயின் உருவம். ஒரு தூணின் ஓரத்தில் பரிதாபமாக பார்த்துக்கொண்டு, தினமும் யாரிடமிருந்தாவது தனக்கு கொஞ்சம் அன்பு கிடைக்காதா என தேடுவது போல் அது தவிப்போடு காத்திருக்கிறது. யாராவது தன்மேல் கருணை காட்ட மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு அதன் ஒவ்வொரு அசைவிலும் […]




