புசிக்காத பழம்
புசிக்காத பழம் ஊருக்கு மத்தியிலே உயர்ந்து பரந்து வளர்ந்த மரம் ஊரார் அணைவதில்லை உயிரினமும் வருவதில்லை மரம் நிறையப்பழம் பறிப்பாருமில்லை புசிப்பாருமில்லை தரையெங்கும் பரவி சொரிந்து கிடக்கிறது. ஈ எறும்பு கூட ஊர்வதில்லை மொய்ப்பதில்லை காரணம் பழுத்தும் பயனென்ன? பழந்தின்னப் பயமென்ன? சொல்லுங்களேன் நாமும் இம்மரம் போல் வாழலாமா? பயனில்லா வாழ்வினால் பாருக்குப் பயனென்ன? யாருக்குப் பயனென்ன? மி.சூசைதாசன்










