Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

செய்திகள்

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அளித்துள்ள உறுதிமொழி

இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் உறுதி வழங்கியுள்ளது. இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கை பாரியளவிலான இரண்டு பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்நோக்க நேரிட்டதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜூலி கொசெக் தெரிவித்துள்ளார். பொருளாதார அதிர்ச்சி நிலைமை தித்வாக புயல் தாக்கம் மற்றும் மத்திய கிழக்கு போர் பதற்றம் போன்ற பொருளாதார அதிர்ச்சிகளினால் இாலங்கை பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த […]

செய்திகள்

இலங்கையில் தொலைபேசி பயன்பாடு அதிகரிப்பு

  • April 24, 2026
  • 0 Comments

இலங்கையில் நிலையான மற்றும் கையடக்கத் தொலைபேசிகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொருளாதார மீளாய்வு அறிக்கையின்படி, இலங்கையில் ஒவ்வொரு 100 பேருக்கும் சுமார் 147 கையடக்கத் தொலைபேசிகள் பயன்பாட்டில் உள்ளமை தெரியவந்துள்ளது. அதேபோன்று, ஒவ்வொரு 100 பேருக்குமான நிலையான தொலைபேசிகளின் எண்ணிக்கை 12.1 ஆகக் காணப்படுகிறது. கடந்த 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். நாட்டில் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தொடர்பாடல் வசதிகள் விரிவடைந்து வருவதையே இந்தத் […]

செய்திகள்

உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை மாற்றம்

இலங்கையின் பல பிரதேசங்களில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை “அவதானம் செலுத்த வேண்டிய” மட்டத்தில் இருக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பம் 39 பாகை செல்சியஸ் முதல் 45 பாகை செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என்று அந்தத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்தார். நிலவும் கடும் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய […]

செய்திகள்

இலங்கை நிலைமை குறித்து இன்று நோர்வே பாராளுமன்றில் விவாதம்!

  • February 26, 2026
  • 0 Comments

இலங்கையின் அண்மைய போக்குகள் குறித்து நோர்வே பாராளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படவுள்ளது. இலங்கையில் தேர்தல் இடம்பெற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் நோர்வே பாராளுமன்றத்தில் இடையீட்டு விவாதமாக இலங்கை சம்பந்தமாகவிவாதிக்கப்படவுள்ளது. நோர்வே தொழிற் கட்சியை சேர்ந்த இலங்கையை பூர்வீகமாக கொண்ட நோர்வே பாராளுமன்ற உறுப்பினரான அம்சி குணரத்னம் இவ்விவாதத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து நோர்வே வெளிவிவகார அமைச்சர் பதிலளித்து உரையாற்றவுள்ளார். தேர்தலை அடுத்து இலங்கையின் செயற்பாடுகள் முக்கியமாக உள்ளூர் மற்றும் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகள் குறித்து இங்கு […]

செய்திகள்

இலங்கையில் வாக்காளர் இடாப்பு மீளாய்வு பணிகள் தொடக்கம்

  • February 4, 2026
  • 0 Comments

இலங்கையில் வாக்காளர் இடாப்பு மீளாய்வு பணிகளை இலங்கை தேர்தல் திணைக்களம் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த வாக்காளர் இடாப்பு மீளாய்வு பணிகள் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று தகுதியுள்ள அனைத்து பொதுமக்களும் தங்கள் வாக்குரிமையை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். 2026.02.02 இந்த வருடாந்திர வாக்காளர் இடாப்பு மீளாய்வுப் பணிகள் தொடங்கியுள்ளது. தேர்தல் திணைக்களப் பணியாளர்கள் மற்றும் கிராம் அதிகாரிகள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று இந்த மீளாய்வு விவரங்களை திரட்டி வருகின்றனர். இந்த புதிய வாக்காளர் மறுசீரமைப்புப் பணிகள் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதியன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் உள்ளடக்கியே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படைப்பாக்கம்

இலங்கைக் கலைஞர்களின் பங்கேற்பில் உருவான “கண்ணம்மா”

  • January 26, 2026
  • 0 Comments

முற்று முழுதாக இலங்கை கலைஞர்களின் பங்கேற்பில் தயாரிக்கப்பட்ட ‘கண்ணம்மா’ திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் யாழ். ராஜா திரையரங்கில் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட படக்குழு இதனை தெரிவித்தது. ஈழப்போராட்டத்தின் பாதிப்பையும் வலிகளையும் வெளிப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள கண்ணம்மா திரைப்படத்திற்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர். 2J மூவீஸ் தயாரிப்பில் யூட் சுகியின் இயக்கத்தில் உருவாகியுள்ள கண்ணம்மா திரைப்படத்திற்கு பிரசாந் கிருஷ்ண பிள்ளை இசையை வழங்கியுள்ளதுடன் படத்தொகுப்பை […]

அறிந்து கொள்வோம்

இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் தொகை

  • January 8, 2026
  • 0 Comments

இலங்கையில் மொத்தமாக 5,567,676 தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனர். இதில் 2,498,669 மக்கள்வடகிழக்கு மாகாணங்களில் வாழ்கின்றனர். 3,069,007 தொகையான மக்கள் வடகிழக்கிற்கு வெளியே தென் இலங்கை மாகாணங்களில் வாழ்கின்றனர். ஆக இலங்கையில் 55.12% சதவீதமான பெரும்பான்மையான தமிழ் பேசும் மக்கள் வடகிழக்கிற்கு வெளியே தென் இலங்கை மாகாணங்களிலேயே வாழ்கின்றனர்? வடகிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களின் சதவீதம் 44.88% மட்டும் ஆகும். இலங்கையில் வடகிழக்கிற்கு வெளியே தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேச செயலகங்கள் பின்வருமாறு: […]