Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

செய்திகள்

ஆவரங்கால் சர்வோதய புதிய நிர்வாகத் தெரிவு

  • April 11, 2026
  • 0 Comments

ஆவரங்கால் சர்வோதய சன சமூக நிலையத்தின் புதிய நிர்வாகத் தெரிவு 08.042026 அன்று 7.30 மணியளவில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிர்வாகத் தெரிவானது வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தி.நிரோஷ், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை உறுப்பினர் தவராஜசிங்கம் மற்றும் சன சமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது. தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகம் வருமாறு:- இக்கூட்டத்தில் சர்வோதய சன சமூக நிலைய உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

செய்திகள்

நெடுந்தாரகை இன்றிலிருந்து சேவையில்!

  • March 30, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், மார்ச் 29, முதல் நெடுந்தாரகை படகுச் சேவை இடம்பெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்தில் பழுதடைந்துள்ள நெடுந்தாரகையை திருத்திச் சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அந்தவகையில் நெடுந்தாரகையை நேரடியாக பார்வையிட்டு அதனைத் தற்காலிகமாக திருத்துவதற்கான நட வடிக்கையை வடபிராந்திய கடற்படைத் தளபதி அட் மிரல் புடிக்ஹ லியனகமகே நடவடிக்கை எடுத்தமைக்கு அமைவாக இன்றிலிருந்து அது சேவையில் ஈடுபடவுள் து என தெரிவிக்கப்பட்டது. நெடுந்தாரகையினை நிரந்தரமாக […]

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – சபாரத்தினம் பரராசசிங்கம்

  • March 19, 2026
  • 0 Comments

ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், கொம்மந்தறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாரத்தினம் பரராஜசிங்கம் (துரை சவுண்ட் உரிமையாளர்) அவர்கள் 19/03/2026 அன்று காலமானார். உடுப்பிட்டி வடக்கு, கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலயத்தில் தர்மகர்த்தா சபை தலைவராக கடமையாற்றியுள்ளார். அன்னாரின் இறுதி கிரியை நாளை (20/03/2026) காலை 9:00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று ஊரிக்காடு மயிலியதனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி! தகவல்: குடும்பத்தினர்

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – வல்லிபுரம் சூரியபிரகாசம்

  • March 16, 2026
  • 0 Comments

யாழ். புலோலி தெற்கு பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் சூரியபிரகாசம் அவர்கள் 15-03-2026 அன்று காலமானார். இவர் ஆலடியார் பரம்பரையைச் சேர்ந்தவர். இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரம்படும்.

செய்திகள்

உடுவில் மகளிர் கல்லூரி சம்பியன்!

  • March 13, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், மார்ச் 12 வலய மட்ட ரீதியிலான பெருவிளையாட்டுப் போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரி இரண்டு சம்பியன்களை சுவீகரித்துள்ளது. குறித்த போட்டியில் பூப்பந்தாட்டத்தில் 18 வயதுப்பிரிவில் முதலாமிடத்தையும், 16 வயதுப்பிரிவு இரண்டாமிடத்தையும் பெற்று மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. வெற்றி பெற்ற அணிகளுக்கும், அவர்களை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்களுக்கும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

அறிந்து கொள்வோம் ஊர் புதினம்

பட்டம் பெற்ற துரைராஜா அருண்குமார் (BA)

  • March 10, 2026
  • 0 Comments

யாழ். பல்கலை கழகத்தில் நடைபெற்ற 40 வது பட்டமளிப்பு விழாவில் 21.02.2026 அன்று பட்டம் பெற்ற துரைராஜா அருண்குமார் (BA) அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பார்வை இல்லாத நிலையிலும், உறுதியான மனவலிமையும் விடாமுயற்சியும் கொண்டு அவர் இந்த உயரத்தை அடைந்துள்ளார் தடைகள் அவரை தடுக்கவில்லை, அவை அவரை மேலும் வலிமையாக்கின.இன்று அவர் பெற்ற பட்டம், அவரது திறமை மற்றும் நம்பிக்கையின் வெற்றிச் சின்னம். அவரின் எதிர்காலம் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள். அத்துடன் இவர் புலமைப்பரிசில் பரிட்சையில் […]

தாயகத்து படைப்புகள் படைப்பாக்கம்

அந்தோனி புதிய ஈழத்தமிழ் திரைப்பட முன்னெடுப்பு

சலனப் பகிர்வு: அந்தோனி புதிய ஈழத்தமிழ் திரைப்பட முன்னெடுப்பு.மகிழ்வோடு வரவேற்று ஊக்கமளிப்போம். அந்தோனி “Anthony” இந்தத் திரைப்பட முன்னோட்டம் (ட்ரெய்லர் – ஒரு நிமிடம்) பார்த்து இரசியுங்கள். மண் மற்றும் கடலை மையமாகக் கொண்ட ஒரு நெய்தல் வாழ்வு உணர்ச்சி பூர்வமான கதை யாழ்ப்பாணத்தின் நீல வான வரம்புகளைத் தாண்டி, அலைகளின் இதயத் துடிப்புடன் வாழும் ஒரு குடும்பத்தின் பயணத்தை இந்த படம் வெளிப்படுத்துகிறது. இசைஞானி இளையராஜா ஈழத்தமிழ் திரைப்படத்திற்கு முதற்தடவையாக இசை அமைத்துள்ளார். நடிகர் நிழல்கள் […]

செய்திகள்

கச்சதீவில் 6,000 இலங்கை பக்தர்கள்!

யாழ்ப்பாணம், பெப். 28 கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்காக குறிகாட்டுவான் இறங்குதுறையிலிருந்து 4,439 பக்தர்களும், நெடுந்தீவிருந்து 450 பக்த்தர்களும், ஊர்காவற்றுறையிலிருந்து 434 பக்தர்களும் சென்றடைந்த நிலையில், அன்று இரவு குறிகாட்டுவான் மற்றும் காங்கேசன்துறையிலிருந்து மேலும் 500 பக்தர்கள் சென்றடைந்தனர். நீர்கொழும்பு மற்றும் மன்னார் உட்பட ஏனைய மாவட்டங்களிலிருந்து நேரடியாகவும் பக்தர்கள் சென்றடைந்துள்ளனர். குறிகாட்டுவான் வந்தடைந்த 4,439 பக்தர்களும் கடற்படை மற்றும் தனியார் படகுகள் மூலம் கச்சதீவை சென்றடைந்தனர். இம்முறை 6,000க்கும் மேற்பட்ட இலங்கை பக்தர்கள் அங்கு […]

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – மங்களேஸ்வரி நவரெத்தினம்

  • February 25, 2026
  • 0 Comments

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட மங்களேஸ்வரி அம்மாள் நவரெத்தினம் (வண்ணமக்கா) 22.02.2026 அன்று இலண்டனில் காலமானார். அன்னாரின் கிரியைகள் பற்றிய விபரம்: 01.03.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி தொடக்கம் 10 மணி வரை கீழ்வரும் முகவரியில் ஈமக்கிரியை நடைபெறும்.The Memon Centre, 3 3Weir Rd, London SW12 0LT பின்னர் காலை 11 மணிக்கு கீழ்வரும் முகவரியில் தகனக்கிரியை நடைபெறும்.Lambeth Crematorium, Blackshaw Road Tooting, London SW17 OBY இத்தகவலை உற்றார், […]