83இன் கரி ஆடி படுகொலை நினைவு கூறல்
83இன் கரி ஆடி படுகொலை நினைவு கூறல்.-2023 ஆடி பிறக்கையில் தங்கத்தாத்தா பாட்டிசைக்க,சீவிச்சிங்காச்ரிச்சு, குங்குமப்பொட்டிட்டு, பூமாலை சூடி, முற்றத்தில் கோலமிட்டு, குத்துவிளக்கேற்றி, இறைவனைப்போற்றி, ஆடிப்பாடி குதூகலமாய் பனங்கட்டிக்கூழ்குடித்து, கொழுக்கட்டை சுவைத்துண்டு ஆனந்தமாய் மகிழ்ந்திருந்த தமிழருக்கு காலனின் வருகை தோன்றியது கரி ஆடியாக. தர்மதேவன் நீதி பார்த்து வழங்கவேண்டி சிதைந்து, வதைந்து, வெந்து கொல்லப்பட்ட இனம் ஈழத்தில் தமிழ் இனம். உரிமையை பறித்து, உடமையைக்கொழுத்தி, உயிர்களைக்கொன்றான் அன்னியன் அக்கரிநாளில்; ஆடிஆடி வந்த ஆடி எண்பத்திமூன்றில் கருநாகத்துடன் வந்து ஈழத்தமிழர் […]









