சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் >>>பகுதி 10
“துரையை அடிக்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருந்தது. அதைச் செய்தவர்கள் அவர்களிருவருந்தாம். அவர்கள் இருவருடன் நாங்கள் நான்கு பேர்கள் சென்றது, எங்களுக்கிருக்கும் ஒற்றுமையால் தான். மேலும் மேலும் அய்யன் பெருமாளைப் பேசவைப்பதன் மூலம் மாடசாமியால் பெறமுடிந்த தகவல்கள் இவை. ஆக, தொழிலாளர்கள் அனைவரிடமும் துரைத்தனத்துக்கெதிராக அனல் பூக்கும் உணர்வுகள் அரும்பிவருகின்றன. மாடசாமி இதைத்தானே எதிர்பார்த்தார். உணர்வுகள் மலர்ந்து செயல்வடிவம் பெறுவது ஓரிருவர் கைகளில்தான். கண்டியில் நடைபெற்றுக் கொண்டிருந்த வழக்கு விசாரணை கொழும்புக்கு மாற்றப்பட்டது. தொழிலாளர்கள் முதலில் […]











