சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் >>>பகுதி 9
ஐந்து வருடங்களுக்கு முன்னர் நாவலப்பிட்டி நகரில் நடந்த கூட்டம் அவனது நினைவுக்கு வந்தது. ஜயதிலக பார்க்கில் நாவலப்பிட்டி நகரம் அதுவரை காணக்கிடைக்காத ஜனத்திரள் குவிந்திருந்தது. பச்சை, வெள்ளை, சிவப்பு என்ற மூவர்ணக் கொடிகள் பட்டொளி வீசி பறந்துக் கொண்டிருந்தன என்றாலும் சிவப்பு வண்ணக் கொடிகளே மைதானத்தில் நிறைந்திருந்தன. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கென்றே இந்தியாவிலிருந்து பேச்சாளர்கள் வந்திருக்கின்றனர். கம்யூனிஷ்ட் கட்சியின் பேச்சாளர் கமலாதேவி சட்டோபாத்யா கைலாகு கொடுத்து மேடையிலேறி அனைவரையும் பார்த்து கையசைக்கிறார். அவரது மலர்ந்த முகம் […]












