இயற்கை – நிலம் – இசை : தொடர் 11 – T.சௌந்தர்
ஐரோப்பிய நாடுகளின் தேசிய எழுச்சிகளும் நிலம்சார் இசைகளும்: மற்றெல்லாக்கலைகளையும் விட இசையும், ஓவியமும் உலகமொழியாகவும் கலாச்சார, பண்பாட்டு எல்லைகளையும் தாண்டிய கலைகளாகவும் விளங்குகின்றன. அதிலும் பூடகமான இசைக்கலை ஒன்றே மனித உணர்வுகளின் நுண்மையான, பல சமயங்களில் அறிவுநிலைகளுக்கு சவால் விடக்கூடிய, நுண்ணுணர்வு மேலோங்கிய கருத்துக்களையும் உணர்த்தக்கூடிய ஊடகமாகவும் இருக்கிறது. இசையுடன் இயற்கை எவ்வாறு தொடர்புடையது? நம் உணர்வுகள் ஒலிகளுடன் ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் இயற்கையுடன் ஆழமாக வேரூன்றிய உணர்வுபூர்வமான தொடர்பும் உள்ளது. இயற்கை உலகின் இசையானது […]












