Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

அறிந்து கொள்வோம்

திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் திருக்கோவில்

  • March 22, 2026
  • 0 Comments

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரில் இருந்து சுமார் 25 கி.மீ.,தொலைவிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும்,உள்ள திருக்கொள்ளிக்காடு எனுமிடத்தில் அமைந்துள்ளது தலவரலாறு: சூரியனாரின் மனைவி உஷாவால் சூரியனாரின் உஷ்ண உக்கிரத்தைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. பக்கத்தில் நெருங்கமுடியாமல் மருகினார். நிழலாக உள்ள சாயாதேவியை சூரியனாருக்கு மணம் செய்துவைத்தார். சாயாவாலும் சூரியத் தகிப்பை தாங்கமுடியவில்லை. இதனால், என்ன செய்வது எனத் தெரியாமல், திருக்கொள்ளிக்காடு எனும் திருத்தலத்துக்கு வந்து சிவனாரை நினைத்து தவம் புரிந்தார். சூரிய பகவானின் தவத்தில் மகிழ்ந்த […]

அறிந்து கொள்வோம் செய்திகள்

இனவெறி ஒழிப்பு சர்வதேச நாள் ஏன் முக்கியம்

  • March 21, 2026
  • 0 Comments

⸻ ஷார்ப்வில், இனவெறி, மற்றும் நாம் வாழும் உலகம். 1960 மார்ச் 21ஆம் தேதி, தென்னாபிரிக்காவின் ஷார்ப்வில் என்ற நகர்ப்புற பகுதியில் ஆயிரக்கணக்கான கருப்பின மக்கள் ஒரு காவல் நிலையம் முன்பு கூடினர். அவர்கள் அப்பார்தெய்ட் ஆட்சியின் “பாஸ் சட்டங்கள்”க்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்தச் சட்டங்கள் கருப்பின மக்களின் வாழும் இடம், பயணம், மற்றும் வேலை செய்யும் உரிமைகளை கட்டுப்படுத்தின. ஒருவர் பாஸ் புத்தகம் இல்லாமல் இருந்தால், அவர் கைது செய்யப்படலாம். இந்த போராட்டம் முழுமையாக […]

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – சபாரத்தினம் பரராசசிங்கம்

  • March 19, 2026
  • 0 Comments

ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், கொம்மந்தறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாரத்தினம் பரராஜசிங்கம் (துரை சவுண்ட் உரிமையாளர்) அவர்கள் 19/03/2026 அன்று காலமானார். உடுப்பிட்டி வடக்கு, கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலயத்தில் தர்மகர்த்தா சபை தலைவராக கடமையாற்றியுள்ளார். அன்னாரின் இறுதி கிரியை நாளை (20/03/2026) காலை 9:00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று ஊரிக்காடு மயிலியதனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி! தகவல்: குடும்பத்தினர்

செய்திகள்

அடுத்தமாத இறுதி வரை எரிபொருள் கையிருப்பு!

  • March 18, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் அதிகரித்தாலும், இலங்கையில் அடுத்த மாத இறுதிவரை தேவையான எரிபொருள் கையிருப்பில் உண்டு. அளவாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதற்காகவே QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகம் குறித்த நிலைமையைத் தெளிவுபடுத்தும் வகையில் நேற்று ஊடகங்களுக்கு விளக்கமளித்த போதே இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். அந்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ப் […]

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – வல்லிபுரம் சூரியபிரகாசம்

  • March 16, 2026
  • 0 Comments

யாழ். புலோலி தெற்கு பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் சூரியபிரகாசம் அவர்கள் 15-03-2026 அன்று காலமானார். இவர் ஆலடியார் பரம்பரையைச் சேர்ந்தவர். இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரம்படும்.

செய்திகள்

உடுவில் மகளிர் கல்லூரி சம்பியன்!

  • March 13, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், மார்ச் 12 வலய மட்ட ரீதியிலான பெருவிளையாட்டுப் போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரி இரண்டு சம்பியன்களை சுவீகரித்துள்ளது. குறித்த போட்டியில் பூப்பந்தாட்டத்தில் 18 வயதுப்பிரிவில் முதலாமிடத்தையும், 16 வயதுப்பிரிவு இரண்டாமிடத்தையும் பெற்று மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. வெற்றி பெற்ற அணிகளுக்கும், அவர்களை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்களுக்கும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

செய்திகள்

உலகை ஆட்டம் காண வைத்த எரிபொருள்கள் விலையேற்றம்

  • March 13, 2026
  • 0 Comments

85 நாடுகள் பெரும் பாதிப்பு கொழும்பு, மார்ச் 12 மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலையைத் தொடர்ந்து, உலகளவில் எரிபொருள் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியாக உயர்ந்துள்ளன. போர் தொடங்கிய குறுகிய காலத்திற்குள் குறைந்தது 85 நாடுகள் பெற்றோல் விலை உயர்வைப் பதிவு செய்துள்ளன. சர்வதேச எரிபொருள் விலை விவரங்களின்படி ஆசிய நாடுகள் இந்த விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உலகிலேயே மிக அதிகப்படியான உயர்வாக 50 வீத விலை உயர்வைப் பதிவு செய்துள்ளது. இங்கு […]

அறிந்து கொள்வோம் ஊர் புதினம்

பட்டம் பெற்ற துரைராஜா அருண்குமார் (BA)

  • March 10, 2026
  • 0 Comments

யாழ். பல்கலை கழகத்தில் நடைபெற்ற 40 வது பட்டமளிப்பு விழாவில் 21.02.2026 அன்று பட்டம் பெற்ற துரைராஜா அருண்குமார் (BA) அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பார்வை இல்லாத நிலையிலும், உறுதியான மனவலிமையும் விடாமுயற்சியும் கொண்டு அவர் இந்த உயரத்தை அடைந்துள்ளார் தடைகள் அவரை தடுக்கவில்லை, அவை அவரை மேலும் வலிமையாக்கின.இன்று அவர் பெற்ற பட்டம், அவரது திறமை மற்றும் நம்பிக்கையின் வெற்றிச் சின்னம். அவரின் எதிர்காலம் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள். அத்துடன் இவர் புலமைப்பரிசில் பரிட்சையில் […]

தாயகத்து படைப்புகள் படைப்பாக்கம்

அந்தோனி புதிய ஈழத்தமிழ் திரைப்பட முன்னெடுப்பு

சலனப் பகிர்வு: அந்தோனி புதிய ஈழத்தமிழ் திரைப்பட முன்னெடுப்பு.மகிழ்வோடு வரவேற்று ஊக்கமளிப்போம். அந்தோனி “Anthony” இந்தத் திரைப்பட முன்னோட்டம் (ட்ரெய்லர் – ஒரு நிமிடம்) பார்த்து இரசியுங்கள். மண் மற்றும் கடலை மையமாகக் கொண்ட ஒரு நெய்தல் வாழ்வு உணர்ச்சி பூர்வமான கதை யாழ்ப்பாணத்தின் நீல வான வரம்புகளைத் தாண்டி, அலைகளின் இதயத் துடிப்புடன் வாழும் ஒரு குடும்பத்தின் பயணத்தை இந்த படம் வெளிப்படுத்துகிறது. இசைஞானி இளையராஜா ஈழத்தமிழ் திரைப்படத்திற்கு முதற்தடவையாக இசை அமைத்துள்ளார். நடிகர் நிழல்கள் […]