திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் திருக்கோவில்
அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரில் இருந்து சுமார் 25 கி.மீ.,தொலைவிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும்,உள்ள திருக்கொள்ளிக்காடு எனுமிடத்தில் அமைந்துள்ளது தலவரலாறு: சூரியனாரின் மனைவி உஷாவால் சூரியனாரின் உஷ்ண உக்கிரத்தைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. பக்கத்தில் நெருங்கமுடியாமல் மருகினார். நிழலாக உள்ள சாயாதேவியை சூரியனாருக்கு மணம் செய்துவைத்தார். சாயாவாலும் சூரியத் தகிப்பை தாங்கமுடியவில்லை. இதனால், என்ன செய்வது எனத் தெரியாமல், திருக்கொள்ளிக்காடு எனும் திருத்தலத்துக்கு வந்து சிவனாரை நினைத்து தவம் புரிந்தார். சூரிய பகவானின் தவத்தில் மகிழ்ந்த […]













