Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

செய்திகள்

இணையவழி நிதி மோசடிகள் அதிகரிப்பு; பொதுமக்களுக்கு பொலிஸ் அறிவுறுத்தல்

  • December 31, 2025
  • 0 Comments

இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி நிதி மோசடி செய்யும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன என இலங்கை பொலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக டெலிகிராம், வட்ஸ்அப் மற்றும் ஏனைய ஒன்லைன் தகவல் தொடர்பு வலைப்பின்னல்கள் ஊடாக இந்த மோசடிகள் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் பொருள்களை வழங்குவதாகக் கூறி விளம்பரப்படுத்துதல். பொருள்கள் விற்றுத் தீரப்போகின்றன அல்லது வேறு வாடிக்கையாளர்கள் வரிசையில் உள்ளனர் எனக் […]

செய்திகள்

சுற்றுலாத்துறையிலும் வரலாற்றுச் சாதனை!

  • December 31, 2025
  • 0 Comments

கொழும்பு, டிசெ. 30 இலங்கையின் 2025 ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 2018 ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை முறியடித்து சாதனை படைத்துள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் உலகளாவிய சவால்களைத் தாண்டி, இலங்கை மீண்டும் சர்வதேச பயணிகளின் சொர்க்கபுரியாக மாறியுள்ளதை புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதன்படி 2018 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த 2,333,796 சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 2025 ஆம் ஆண்டு முறியடித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு முழுவதிலும் 2,053,465 பயணிகளே […]

துயர்பகிர்வோம்

சுதரின் நீங்காத நினைவுகள் – (முதலாம் ஆண்டு)

  • December 29, 2025
  • 0 Comments

நினைவுக் கவிதை – சுதருக்கு நீ சென்ற பாதைமுடிந்த பயணம் அல்ல,எங்கள் நினைவுகளில்தொடரும் வழி. உன் குரல் மௌனமானது,ஆனால் உன் பெயர்எங்கள் உரையாடல்களில்இன்னும் உயிருடன். ஊரின் செய்திகளில்,உறவின் ஒன்றுகூடல்களில்,“சுதர் இருந்திருந்தால்…”என்ற வரியில்நீ மீண்டும் வருகிறாய். மண்ணில் புதைந்தது உடல்,மனங்களில் புதையாததுஉன் மனிதம். சென்றாலும் நீ போகவில்லை,நீ இருந்த இடமெல்லாம்இன்றும்நினைவுகள் விழிக்கின்றன. சுதர் மனித குல வரலாற்றிலே மரணம் என்பது பொதுவானது. அதில் நம்முடைய வாழ்வில், சில உறவுகளின் இழப்புகளோடும் நினைவுகளோடும் தான் நாம் கடந்து வந்திருக்கிறோம்.சுதரை இழந்து […]

செய்திகள்

உடுத்துறை நினைவாலயத்தில் நேற்று சுனாமி நினைவேந்தல்!

  • December 28, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம், டிசெ. 27 சுனாமி பேரழிவின் 21ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று காலை உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நடைபெற்றது. சுனாமி நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலமை கிராம சேவையாளர் தோமஸ் யூட் மலர்மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைக்க, அதனை தொடர்ந்து வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க தலைவர் தங்கவேல் தங்கரூபன் […]

வாழ்த்துக்கள்

2025 கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

  • December 25, 2025
  • 0 Comments

அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த இந்த புனித கிறிஸ்துமஸ் திருநாள்,உங்கள் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையையும், புதிய தொடக்கங்களையும் கொண்டு வரட்டும்.பிறந்தெழுந்த இயேசு குழந்தையின் அருளும் ஆசீர்வாதமும்,உங்கள் குடும்பத்தையும் இல்லத்தையும் எப்போதும் காக்கட்டும். இந்த பண்டிகை காலம்,பகிர்வின் மகிழ்ச்சி, மன்னிப்பின் அழகு, அன்பின் வலிமை ஆகியவற்றைநம் உள்ளங்களில் மேலும் ஆழமாக விதைக்கட்டும்.கவலைகளை ஒதுக்கி வைத்து,மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும்அன்புடையவர்களுடன் இனிய தருணங்களை பகிர்ந்து கொள்ளும்ஒரு அழகிய காலமாக இது அமையட்டும். வருகின்ற புதிய ஆண்டு,உங்களுக்கு உடல் நலம், மன அமைதி,தொழில் மற்றும் […]

துயர்பகிர்வோம்

கண்ணீர் அஞ்சலி – சரவணமுத்து திருஞானசம்பந்தமூர்த்தி

  • December 20, 2025
  • 0 Comments

கட்டுவனைப் பிறப்பிடமாகவும் கம்பர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து திருஞானசம்பந்தமூர்த்தி அவர்கள் 20.12.2025 [ சனிக்கிழமை] அன்று காலமானார். அன்னார் பரமேஸ்வரியின் அன்புக்கணவரும், காலம்சென்றவர்களான சரவணமுத்து நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா நேசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும் , காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, பத்மாவதி, சுந்தரமூர்த்தி, சரஸ்வதி, செல்வராணி, சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும், சிவரஞ்சன், சிவரஞ்சினி, ( சுவிஸ்) காலஞ்சென்ற சிவஜோதி சிவகலாபன், (ஐக்கிய இராச்சியம்) சிவபாணு ஆகியோரின் பாசமிகு தந்தையும், கயல்விழி, ரவீந்திரன், தவராசா, […]

படைப்பாக்கம்

தலைமைத்துவம் – சுடரி கவிதைகள்

  • December 20, 2025
  • 0 Comments

குழுவொன்றில் பலபேர்கூடியே இருந்தாலும்வழி நடத்த ஒருவர்தலைவராக வேண்டும் தம் இனப் பற்றும்தம் சார்ந்தோர் நலனும்தம்முடையோர் வாழ்வும்தாழ்வின்றி உயர்ந்திட தன்னலம் இன்றிதன் சுகம் பாராதுதன் வாழ்வை அர்ப்பணிக்கதன்னவர்க்காய் வாழ்ந்திட எமக்காக ஒரு தலைவர்எம்முடன் இருந்து விட்டால்எட்டி வைக்கும் அடியெல்லாம்வெற்றிப் படி ஆகிவிடும் பல குழுவாய் பிரிந்திருந்துபல் வேறு கொள்கையுடன்பலமின்றி வாழ்ந்திருந்தால்பாரினிலே பயனேது பக்குவமாய் எடுத்துரைத்துபழுதின்றி ஒன்று கூடிபலமோடு வாழ்ந்திருந்தால்பார்முழுதும் நம் வசமே நம்மோடு இருப்பவர்கள்நலமாக உள்ளதன்றிநம் அயலில் இருப்போரும்நலமாக இருக்க எண்ணும் தாயன்புக்கு நிகராகதந்தை போல் அரவணைக்கதலைவனொருவன் இருந்துவிடில்தரணியையே […]

செய்திகள்

கடுமையான வானிலை முன்னறிவிப்புக்காக புதிய கருவிகள் அறிமுகப்படுத்தும் இலங்கை

  • December 19, 2025
  • 0 Comments

இலங்கையின் கடும் வானிலை முன்னறிவிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக, புத்தளத்தில் அதிநவீன டொப்ளர் ராடர் கட்டமைப்பை நிறுவும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் இந்த டொப்ளர் ராடரை ஜப்பானிய அரசாங்கத்தின் ஆதரவுடன் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இந்த ராடர் கட்டமைப்பு 2027 ஆம் ஆண்டளவில் முழுமையாகச் செயற்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் ஒரு முக்கிய மேம்படுத்தலாகக் கருதப்படுவதுடன், இதனுடன் மேலதிக அத்தியாவசிய உபகரணங்களும் […]