Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

செல்வி விசாகரத்தினம் சின்னத்துரை

  • June 26, 2022
  • 0 Comments

செல்வி விசாகரத்தினம் சின்னத்துரை (ஓய்வுநிலை உதவி திட்டமிடல் பணிப்பாளர் ) யாழ்ப்பாணம் வடமராட்சி ஊரிக்காடு நாவலடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி விசாகரத்தினம் சின்னத்துரை அவர்கள் நேற்று (26.06.2012) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – இராசமணி தம்பதியரின் அன்புப் புதல்வியும் காலஞ்சென்ற துரைராசா, காலஞ்சென்ற கமலாதேவி, உத்தரராசா, காலஞ்சென்ற மல்லிகாதேவி, தியாகராஜா, ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும் மகேஸ்வரராஜா, கணேசராஜா, காலஞ்சென்ற புவனேஸ்வரன், அழகேஸ்வரராஜா, விக்னேஸ்வரன், யசோதா, காலஞ்சென்ற நேசராஜா, அருச்சுனராஜா ஆகியோரின் […]

கட்டுரைகள் வானம் சிவந்த நாட்கள்

வானம் சிவந்த நாட்கள்>> சாரல்நாடன்

  • June 24, 2022
  • 0 Comments

சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் என்ற உண்மை சம்பவங்களை அடிப்படியாக வைத்து எழுதப்பட்ட புத்தகத்தை இங்கே தொடராக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.  வானம் சிவந்த நாட்கள் என்ற புத்தகத்தின் முன்னுரையில் மு. நித்தியானந்தம் அவர்கள் இவ்வாறு கூறுகிறார் .”மலையைக இலக்கியத்திற்கான வரலாற்றை உருவாக்குவதற்கான ஆதாரங்களைத் தேடும் முயற்சியில் அயராது உழைத்த பெருமகன் சாரல்நாடன்“. சாரல்நாடன் எழுதி வெளியிட்ட பதினொரு நூல்களும் மலையகத்தையே உயிராய் நேசித்த ஒரு எழுத்தாளனின் நெஞ்சக்கணப்பறையின் தகிப்பிலே கனன்றவை.1962ஆம் ஆண்டில் ‘கால ஓட்டம்’ என்ற சிறுகதையோடு […]

கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 24  – T .சௌந்தர்

  • June 21, 2022
  • 0 Comments

இசை சாம்ராஜ்ஜியத்தில் புதிய கவிஞன் தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்  .. மற்றும் என்னை எடுத்து தன்னைக் கொடுத்து போனவன் போனாண்டி தன்னை கொடுத்து என்னை அடைய வந்தாலும் அவருவாண்டி …. என்று அற்புதமான பாடல் வரிகளை ஒரு புதுக்கவிஞர் எழுதினார். அவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ,கண்ணதாசன் போன்றோரைத் தொடர்ந்து தமிழ் திரைப்பாடல் எழுதுவதில் அவர்களின் தொடர்ச்சி என நிரூபித்து நிலைபெற்றார். அவர்தான் கவிஞர் வாலி !  கவிஞர்கள் கண்ணதாசன் , வாலி […]

உடல் நலம்

குறட்டை எதனால் வருகிறது? குறட்டை நீங்க மருத்துவம்!

  • June 20, 2022
  • 0 Comments

குறட்டையை விரட்ட சில எளிய வழிகள்! குறட்டை விடுவது ஒரு சிரிப்பிற்குறிய விஷயம் கிடையாது. இதனால் உலகில் உள்ள பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை குறட்டை விடுபவர்கள் தங்களை மட்டுமல்லாமல், தங்களுடைய துணைவர்களையும் பாதிக்கின்றனர். ஆண் பெண் யாராக இருந்தாலும் குறட்டை விடுவது இருவருக்கும் வரும் பிரச்சனையாக அமைகின்றது. இதை செய்தோம் என்று யாரேனும் கூறும் போது மிகுந்த இக்கட்டான நேரத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறட்டை வருவதற்கு பல காரணங்கள் உண்டு என்பது தான் இதில் நாம் கவனிக்க வேண்டிய […]

கட்டுரைகள்

குருந்தூர் மலையிலுள்ள பௌத்த கோவில் தமிழர்களுடையதா?

  • June 19, 2022
  • 0 Comments

வரலாற்றில் முன்னர் எப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித்தவிக்கும் நிலையில் முல்லைத்தீவில் உள்ள குருந்தூர்மலையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டு புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்படவிருந்த நிலையில் தமிழ் மக்களின் எதிர்ப்புப் போராட்டத்தினால் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது. இவை குறித்தும் குருந்தூர் மலைப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவம் தொடர்பாகவும் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் வரலாற்றுத்துறை தலைவரும் மூத்த பேராசிரியருமான பரமு புஸ்பரத்தினம் இவ்வாரம் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு அளித்த நேர்காணலின் சுருக்கத்தை இலக்கு வாசகர்களுக்குத் […]

சமையல் குறிப்புகள்

ஆட்டிறைச்சி கறி இந்த மாதிரி செஞ்சு பாருங்க 

  • June 18, 2022
  • 0 Comments

வாங்க இண்டைக்கு நாம யாழ்ப்பாணத்து ஆட்டிறைச்சி கறி எப்பிடி தேங்காய் பால் விடாம ஒரு பிரட்டல் கறியா வைக்கிற எண்டு பாப்பம். நீங்களும் இப்பிடி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ. Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve […]

கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 23 – T .சௌந்தர்

  • June 15, 2022
  • 0 Comments

இயலும் இசையும் அல்லது இசையும் இயலும்: கண்ணதாசன் காலம்  . கருத்தாழமும் தத்துவார்த்த அறிவுக்கூர்மையுமிக்க பாடல்களை எழுதி புகழடைந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்றால் சொல்லும் முறையில் ஆழமான கருத்துக்களையெல்லாம் எளிமையாக எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். கவிஞர் கண்ணதாசன் திரைப்பட நுழைவும் திராவிடக்கழக ஆதரவும் சமகாலத்தில் நிகழ்ந்தவை.அறிஞர் அண்ணா, எம்.ஆர்.ராதா ,கலைஞர் கருணாநிதி ,என்.எஸ்.கிருஷ்ணன் , எம்.ஜி.ஆர் என மிகப்பெரிய கலைஞர்கள் கூட்டமே தமிழ் திரையில் முகம் காட்டிய காலம். திராவிட இயக்கத்தின் செல்வாக்கு பின்னர் திராவிட முன்னேற்றக்கழகமாகி […]

அறிந்து கொள்வோம்

யாழ்ப்பாணத்துச் செல்வம் வெங்காயம்

  • June 14, 2022
  • 0 Comments

இக் காணெளியை பார்த்த போது என்னுள் பழைய ஞாபகங்கள் மீண்டும் புத்துணர்வாக ஓடியது.வெங்காய செய்கை மூலம் ‌யாழ்பாணத்தவர் அந்த காலத்தில் பெரும் பணம் ஈட்டியதும் நினைவில் வந்தது.பணப்பயிரான வெங்காய செய்கை பற்றிய இந்த காணெளி புலம் பெயர்ந்து வாழும் எமக்கு ஒரு புதிய உணர்வை தரும் என்ற நம்பிக்கையில் இங்கே காட்சிபடுத்துகிறேன்.