நினைவுகள் அழிவதில்லை-தலைவர் தங்கர்(கம்பர்மலை)
நினைவுகள் அழிவதில்லை அமரர் வடிவேலு தங்கராஜா இது அமரராகிவிட்ட ஒருவரின் கண்ணீர் அஞ்சலியல்ல, நினைவு அஞ்சலியும் அல்ல. வாழ்வில் பல சாதனைகளை வெற்றியாக்கிப் பெருமை பெற்ற ஒரு சமூகத் தொண்டனின் நினைவுச் சிதறல்கள்! சாதாரண ஒரு விவசாயியாக வாழ்க்கை முழுவதும் சீரியமுறையில் செயலாற்றி மறைந்த ஓர் ஊர்ப் பிரமுகரின் வாழ்வியல் குறிப்புகளென்று வேண்டுமானால் கொள்ளலாம்.1957 ஆம் ஆண்டு கம்பர்மலைத் தோட்டங்களில் வெங்காய அறுவடை முடிந்துவிட்ட பங்குனிமாதம் என்று நினைவு இருக்கிறது. புகையிலைத் தோட்டங்களில் பசுமை வீற்றிருந்த ஒரு […]








