Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

படைப்பாக்கம்

“ஒரு பிஞ்சின் ஏக்கம்”

தூங்கிப் பல நாட்களாகிச்
சோர்ந்திருக்கும் நெஞ்சிலே
ஊர வந்த காற்றிலே
சேர்ந்து வந்த தாலாட்டிலே
நெஞ்சுருக மெய் சிலிர்த்து
தன்னையே தான் மறந்து
எங்கோ ஒரு பாயிலே
கன்னமதில் நீர் வழியச்
சொந்தங்களின் துணை தேடும்
அங்கு ஒரு பிஞ்சின் ஏக்கம்
உங்களுக்குத் தெரிகின்றதா?

அரை குறை உணவோடு
நிறை காணா வயிற்றோடு
பஞ்சான உடைதன்னால்
பிஞ்சான உடல் போர்த்து
பெற்றவர் தரும் பாசத்தினை
மற்றவர் பாய்தனில் தேடி
வெறுமையை மனஞ்சுமக்க
தாயின்றித் தந்தையின்றி
தனிமையோ நிலமையெனத்
தவித்துக் கலங்கி நிற்கும்
அங்கு ஒரு பிஞ்சின் ஏக்கம்
உங்களுக்குத் தெரிகின்றதா?

என்றாவது ஒரு நாளில்
யாராவது ஒரு வள்ளல்
சுவை கொண்ட பாயாசம்
பசி தீர ஊற்றிவிட்டு
அத்தோடு அவர் போக
உண்டியற்று நாள் போயும்
இனிப்பூறும் அச்சுவை எண்ணி
நாய் போல வாயூறப்
புறங்கையைத் தான் நக்கிக்
கற்பனையில் சுவைகாணும்
அங்கு ஒரு பிஞ்சின் ஏக்கம்
உங்களுக்குத் தெரிகின்றதா?

கொஞ்சியாட யாருமின்றித்
துஞ்சிப்போகும் இரு விழியால்
அஞ்சிக் கெஞ்சித் தினமும்
கஞ்சி தருவார் யாரோவென
இன்பமற்ற பிறப்பெடுத்து
குற்றம் செய்த கைதிபோல
விதி செய்த சதியானது
எதுவென்று தெரியாது வாழும்
அங்கு ஒரு பிஞ்சின் ஏக்கம்
உங்களுக்குத் தெரிகின்றதா?????

கவிஞர் ஜெகசோதிலிங்கம் (கனடா )

You may also like

படைப்பாக்கம்

என் கவிதை

  • December 30, 2021
தாய் மடி ஆக்கம்: Mrs. Jeyalukshmy. Kanthasamy அலை வந்து அணைத்து மீளும் அழகான தீவு அது, இந்துவின் நித்திலமாய் இலங்குமென் தாய்நாடு இறைவன் எனக்களித்த இன்பவீடாம்
படைப்பாக்கம்

அள்ளிக் கொடுக்க வேண்டாம் கிள்ளியேனும் கொடு !

உள்ளதை உரக்க சொல்லலாம் -அதுஉயர்வுள்ளவன் செய்யும் செயல்நல்லதை சிறக்கச் செய்யலாம்-அதுவும்நாலு பேருக்கு நன்மை தரும் பணி ஆண்டவன் தந்த அறிவினை கொண்டுஆற்றலை பெருக்கி சிந்தித்து பார்!உழைப்பவன் அரைவயிற்று