Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

படைப்பாக்கம்

விடுதலை

  • June 2, 2023
  • 0 Comments

என்னைப்போல் தானேநீங்களும்வீடுதாண்டிவெளியேறுவதையேவிடுதலையென நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்எல்லா வீடும் ஒன்றுபோலில்லைஒரு வீடு சிறகுகள்தருகிறதுஒரு வீடு சிலுவையில் ஏற்றுகிறதுஒரு வீடு சிறைக்கூடமாகிறதுஎன்னைப்போல் தானேநீங்களும்வீட்டுக்குவெளியேதான்வாழ்வென்று ஒன்றிருப்பதாய்நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்அவரவர்க்கும்உள்ளுக்குள் ஒரு வீடிருப்பதும்அதுஉட்புறமாய்தாழிடப்பட்டிருப்பதும்மறந்து வீணேவாசற்படிகளில் நின்று தேம்பிக்கொண்டிருக்கிறோம்இனிதிறக்க வேண்டியதும் மறுத்தால்உடைத்துக்கொண்டுவெளியேற வேண்டியதும்தத்தமது இதயத்தின்கதவுகளைத்தானேதவிரவீட்டின் கதவுகளைஅல்ல —ரிஸ்கா முக்தார்—

வன்னியில் வெளிச்சத்திற்கு வராத மிகப்பிரமாண்டமான சுற்றுலாத்தலம்

  • June 2, 2023
  • 0 Comments

கடந்தமாதம் வன்னியில் பறையனாளங்குளம் தேக்கம்  அணைக்கட்டுப் பகுதிக்குச் சென்ற கலைக்கேசரி ஊடகவியளாளர் திரு. ப. ஜோன்சன் அவர்கள் அவ்விடத்தில் நடைபெற்று வந்த பண்டையகால யானை வர்த்தகம் தொடர்பான வரலாற்று ஆதாரங்கள் பலவற்றைச் சேகரித்துள்ளார். அவற்றுள் வரலாற்றுப் பழமைவாய்ந்த இரண்டு கருங்கற்தூண்களில்  காணப்பட்ட தெளிவில்லாத சித்திரங்களின் புகைப்படங்களை எமக்கு அனுப்பிவைத்தார்.  அவற்றில் வரலாற்றுத் தொன்மைமிக்க சில குறியீடுகளும், இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமி எழுத்துக்களும் காணப்பட்டன. இவை வன்னியின் பூர்வீக வரலாற்றைத் தெரிந்து கொள்ள உதவும் ஆதாரங்களாக […]

கட்டுரைகள்

மே 15 சர்வதேச குடும்ப தினம்!

அனைவர்க்கும் சர்வதேச குடும்பதின வாழ்த்துக்கள் மக்கள்தொகை போக்குகள் மற்றும் குடும்பங்கள் 2022 இன் பிற்பகுதியில், உலக மக்கள் தொகை எட்டு பில்லியன் மக்களை எட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் ‘மனித வளர்ச்சியின் மைல்கல்’ என வகைப்படுத்தப்படும் இந்த மைல்கல் நிகழ்வு மனித ஆயுட்காலத்தை நீட்டிக்கும் ஆரோக்கியத்தில் பெரும் முன்னேற்றங்களை விளக்குகிறது. மக்கள்தொகை வளர்ச்சி குறைந்தாலும் தொடர வேண்டும். இது 2050 இல் 9.8 பில்லியனாகவும், 2100 இல் 11.2 ஆகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகை மாற்றம் என்பது […]

அறிந்து கொள்வோம்

பனை மரங்களின்  (Palm Tree) பயன்பாடு!

  • May 14, 2023
  • 0 Comments

பனை மரங்கள் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து வளரக் கூடியனவாக இருந்திருந்தால் பனம்பழங்கள் ஒவ்வொன்றும் ஈய உறைகளிலே சுற்றப்பட்டு அதன்மேல் ஸ்ரிக்கர்ஒட்டப்பட்டு பாரிய விளம்பரங்களுடன் இங்கு இறக்குமதியாகி வந்திருக்கும். இலகுவில் ஏமாறக்கூடிய மனம்படைத்த நாமும் பணத்தை வாரி இறைத்து அவற்றை வாங்கி உண்டிருப்போம். இதே பனைமரங்கள் அமெரிக்கா தேசத்திலே வளருபவையாக இருந்திருந்தால் பனங்கிழங்குகளின் மருத்துவக் குணங்களை உலகறிந்திருக்கும். கருப்பட்டிகள் அருமருந்தாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும்.நுங்குகளின் மகத்துவம் பேசப்பட்டிருக்கும். ஒடியல், புழுக்கொடியல், மாவகைகள் உலக சந்தையிலே பெரும் இடத்தைப் பிடித்திருக்கும். […]

படைப்பாக்கம்

ஒருத்தியின் இறுதி வரிகள் …

  • May 8, 2023
  • 0 Comments

தோழிகளில் எவளோ ஒருத்தி  செய்து வைத்த அறிமுகம் ஆரம்பத்தில் அதிகம் நாட்டமில்லை பிறகொரு பொழுதில் என்னதான் இருக்குமென்று  உள் நுழைந்தேன்! அடுக்கடுக்காய் அதீத  இன்பத்தில் அகம் மகிழ்ந்தேன்! மனமது மாறியது! குலுங்க குலுங்க கை குலுக்கினேன், எவரென்று தெரியாது  இருப்பினும் உறவாடினோம்! எத்தனை இரவுகள்  எத்தனை பகல்கள்,  வேண்டுமென்றே தொலைத்திருப்பேன்! வேண்டாமென்று  புத்தியுள்ளவர்கள் கூறுகையில்  உமக்கென்ன தெரியும் என்று சாடினேன்! என்னை கொண்டாடுகையில்  ஏதோ நானும் சாதித்துவிட்ட பெரும் நிறைவு! நான் நானாகவே உலாவினேன், என்னை சுற்றிய முகங்களனைத்தும் […]

நீங்கள் வாட்ஸ்அப்பில் தடுக்கப்பட்டுள்ளீர்களா? சரிபார்க்க இந்தப் படிகளைப் பின்பற்றவும்

  • May 8, 2023
  • 0 Comments

பிளாட்பார்மில் உள்ள தொடர்புடனான தொடர்பை நிறுத்தும் எந்தவொரு குறிப்பிட்ட தொடர்பையும் தடுக்கும் தனியுரிமை அம்சத்தை WhatsApp கொண்டுள்ளது. தடுக்கப்பட்ட நபர், கடைசியாகப் பார்த்த, ஆன்லைனில், நிலை புதுப்பிப்புகள் மற்றும் சுயவிவரப் புகைப்படத்தில் செய்யப்பட்ட எந்த மாற்றங்களையும் இனி பார்க்க முடியாது.(WhatsApp) பயனரின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கும் பாதுகாப்பான தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் வாட்ஸ்அப் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில், குறிப்பிட்ட எந்தத் தொடர்பையும் உங்களுக்கு செய்தி அனுப்புவதைத் தடுக்கும் அம்சம் உள்ளது. இந்த அம்சம், உடனடி செய்தியிடல் பயன்பாட்டில் உள்ள தொடர்புகளுடன் தொடர்பு […]

அறிந்து கொள்வோம்

மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம்

  • May 1, 2023
  • 0 Comments

மே தினம் என்றால் என்ன, அது ஏன் கொண்டாடப்படுகிறது? மே நாள் அல்லது மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலக அளவில் கொண்டாடப்படுவதாகும்.18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. […]

படைப்பாக்கம்

புசிக்காத பழம்

  • April 28, 2023
  • 0 Comments

புசிக்காத பழம் ஊருக்கு மத்தியிலே உயர்ந்து பரந்து வளர்ந்த மரம் ஊரார் அணைவதில்லை உயிரினமும் வருவதில்லை மரம் நிறையப்பழம் பறிப்பாருமில்லை புசிப்பாருமில்லை தரையெங்கும் பரவி சொரிந்து கிடக்கிறது. ஈ எறும்பு கூட ஊர்வதில்லை மொய்ப்பதில்லை காரணம் பழுத்தும் பயனென்ன? பழந்தின்னப் பயமென்ன? சொல்லுங்களேன் நாமும் இம்மரம் போல் வாழலாமா? பயனில்லா வாழ்வினால் பாருக்குப் பயனென்ன? யாருக்குப் பயனென்ன? மி.சூசைதாசன்

துயர்பகிர்வோம்

இரத்தினம் தவராசா (கிளி)

  • April 28, 2023
  • 0 Comments

இரத்தினம் தவராசா (கிளி ) கிளி என்று அழைக்கபடும் கொம்மந்தறை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் தவராசா அவர்கள் 28-04-2023 (வெள்ளிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் மனோரஞ்சிதம் அவர்களின் அன்பு கணவரும் அமரர்களான இரத்தினம் ,அன்னம்மாவின் இளைய மகனும் மகாலிங்கம், நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும் திலீபன் ,கேசவன் , தீபா, கேமா ஆகியோரின் அன்புத் தந்தையும் கொளரிதாஸன், செந்தில்குமரன், றோயனா, ராஜ்குமாரி, ஆகியோரின் மாமனாரும்  கஜலோன், வரோதயன், கஜானா, சபினாஷ், சஷ்திகா, கௌசிகன், […]

துயர்பகிர்வோம்

பிரதமகுரு பாலகிருஷ்ண குருக்கள்

  • April 26, 2023
  • 0 Comments

கெருடாவிலை பிறப்பிடமாகவும் ,வசிப்பிடமாகவும் கொண்ட கொம்மந்தறை மனோன்மணி ஆலய பிரதமகுரு பாலகிஷ்ணகுருக்கள் இன்றய தினம் இறைவனடி சேர்ந்துவிட்டார் .அவர்களின் பிரிவுச் செய்தியினைக் கேள்வியுற்று மனம் வருந்தும் நாம், அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.