Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் – [ 09 ] T .சௌந்தர் 

இனிய இசையும் இனிய குரலும் இசையில் வாத்தியங்களுக்குக் கனதியான இடம் கொடுக்கப்பட்டாலும் ,பாடுவதே மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது மனிதக்குரலுக்கே உலகெங்கும் முன்னுரிமை வழங்கப்படுவது பொதுப்பண்பாகவும் இருக்கிறது.  மனிதக்  குரல்களின் மகத்துவம் என்பதை பாடகர்களின் குரல்களிலும்  நாம் தரிசிக்கின்றோம். இனிய இசையுடன் இணைந்து வரும் குரல்கள் அதிகம் கவனம் பெறுவதுடன் ரசிக்கவும் ,போற்றவும் படுகின்றன. இனிமையான  குரல்களின் வசீகரம் பாடல்களை புதியதளத்திற்கு உயர்த்தி செல்கிறது.அதனால்தான் மனிதக்குரலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.ஒரு பாடலில் குரலும் ஒரு பகுதிதான் என்ற போதிலும் […]

அறிந்து கொள்வோம்

முகப்பொலிவை தரும் கிரீம்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு

முகம் பொலிவுடன் விளங்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணும் ஆசைப்படும் ஒன்று! தங்கள் முகம் மாசு மருவின்றி அழகாக , வெள்ளையாக பளிங்கு போல மினுங்க வேண்டும் என்பது தான் 90 % பெண்களின் அவா! தங்கள் முகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட பளிச் என்று வெள்ளையாக இருக்க வேண்டும் என்றே பலரும் ஆசைப்படுகின்றனர்! இந்த ஆசையை மென்மேலும் தூண்டி தங்கள் வியாபாரத்தை பெருக்கி கொள்கின்றனர் முகப்பொலிவு கிரீம் தயாரிப்பாளர்கள்! இந்த முகப்பொலிவு […]

அறிந்து கொள்வோம்

ஒரு சிறப்பு பார்வை-சோப்பு

  • March 3, 2022
  • 0 Comments

சோப்பு பத்தி பேச என்ன இருக்கு?? இருக்கே.. நிறைய இருக்கே… நாம் அன்றாடம் உபயோகிக்கும் சோப்பு நம்மை கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கிறது. குளியல் சோப்பு , கை கழுவதற்கு என்று தனியாக சோப்பு , முகம் கழுவுவதற்கு என்று ஒவ்வொன்றுக்கும் தனி தனியே கடைகளில் விற்கபடுகிறது. இந்த சோப்புகள் என்னவோ நம்மை கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பது உண்மை தான்.. ஆனால் விளம்பரத்தில் சொல்வது போல் எல்லா சோப்புகளும் 99.9% கிருமிகளை அழிப்பது இல்லை ! பொதுவாக சோப்புகள் இயற்கையாக […]

கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் 08 : T .சௌந்தர்.

  • February 28, 2022
  • 0 Comments

அறிந்த  குரல்களும் புதிய நியதிகளும்  புதுவகையான வாத்திய அமைப்பை தமது பாடல்களில் அமைத்தார்கள் என்று சொல்லும் போது அதற்கு ஏற்ப பாடும் குரல்களையும் கண்டெடுக்க வேண்டிய அவசியமும் உண்டாகிறது.   ஏற்கனவே அறிமுகமான .கேட்டுப்பழகிய குரல்களை பயன்படுத்துவதுடன்  புதியவர்களையும் அறிமுகம் செய்வது அல்லது ஏற்கனவே பாடிக்கொண்டிருப்பவர்களில் சிலரை முதன்மைப்படுத்துவதும் இயல்பான ஒரு அம்சமாக இருக்கிறது. ஆனால் மெல்லிசைமன்னர்களைப் பொறுத்தவரையில் தமது படைப்பாற்றலை மேம்படுத்த ஏற்கனவே அறிமுகமான குரல்களை பயன்படுத்தி தமது இசையை புனர்நிர்மானம் செய்தார்கள் என்பது காலத்தின் காட்டாயமாகவும் இருந்தது […]

துயர்பகிர்வோம்

செல்லையா வள்ளியம்மா

  • February 26, 2022
  • 0 Comments

யாழ். வடமராட்சி கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா வள்ளியம்மா அவர்கள் 25-02-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வீரகத்தி சின்னனார் தம்பதிகளின் பாசமிகு மருமகளும். காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற நாகேஸ்வரி, ஞானேஸ்வரி, குகனேஸ்வரி, பரமேஸ்வரி(இலங்கை), ஈஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற யோகராசா, யோகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற உதயகுமாரன்(இலங்கை), வசீகரன்(லண்டன்), உதயகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், லவன்குமார்(இலங்கை), கௌசிகன்(லண்டன்), சிந்துஜன்(லண்டன்), சிந்துஜா(லண்டன்) […]

கட்டுரைகள் நம் ஊர் பெரியோர்கள்

விம்பம்

  • February 23, 2022
  • 0 Comments

ஆசை இராசையா  Asai Rasiah 1946 – 2020 ஈழத்து ஓவியர்கள்சார் பதிவுகள் வேற்றுமொழிகளிலும் பிரசுரமாவதை காணமுடிகிறது சமகாலங்களில்.  மேலும் தமிழ் ஓவியர்களது ஆவணங்கள் தேடப்படுகின்றன, பிரசுரமாகின்றன. அதன் தொடர்ச்சியாக ஓவியர் ஆசை இராசையாவின் விம்பம் என்ற தலைப்பிலான ஓவிய நூல் முக்கிய ஆவணமாகிறது.  இலையுதிர் காலமொன்றில் பாரிசில் இரு ஆண்டுகளுக்கு முன் வார இறுதி நாளொன்றின் அதிகாலைநேரம் யன்னலை லேசாக திறந்தேன் குளிர்காற்றும் இளம் சூரியக்கதிர்களும் முகத்தில் விழுந்தன. அரேபிய கோப்பியருந்தியபடி கொழும்பில் இருந்து வெளிவரும் […]

கட்டுரைகள்

பிப்ரவரி 21சர்வதேச தாய்மொழி தினம்

  • February 22, 2022
  • 0 Comments

எம். ஏ. நுஃமான் தமிழ்மொழி எங்கள் தாய் மொழிஇந்த அரசியல் , சமூக, பண்பாட்டு , அடிப்படை உரிமையின் முக்கியத்துவத்தினையும் ,இதில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என்பதை தெளிவாக உரைக்கும் பதிவு இது … மொழி ஒரு சமூகத்தின் சமூக-பண்பாட்டு அரசியல் வாழ்வுடன் மிக நெருக்கமான உறவுகொண்டுள்ளது. கோட்பாட்டு மொழியியலாளர் வரையறுப்பதுபோல அது முற்றிலும் ஒரு தொடர்பாடல் ஊடகம் மட்டுமல்ல. அது ஒரு சமூகத்தின் தேசிய அல்லது இனத்துவ அல்லது பண்பாட்டு அடையாளமாகவும் மாறுகின்றது. அது மக்களை […]

கட்டுரைகள் காலமும் படைப்புலகமும்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் 07 : T .சௌந்தர்.

  • February 22, 2022
  • 0 Comments

இனிய வாத்தியக்கலவைகளும் , பல்வகை ஒலிநயங்களும். மரபிசையோடு இயைந்த மெட்டுக்களை சிறப்பாக அமைக்கக்கூடிய முன்னோடிகளான ஜி.ராமநாதன், எஸ்.எம்.சுப்பைய்யாநாயுடு ,வி. வெங்கட் ராமன் , கே.வி.மகாதேவன் போன்றவர்களின் பாடல்களிலிருந்து மெல்லிசைமன்னர்களின் வித்தியாசமானதாக , புதுமையாக இருப்பதை நாம் காண்கிறோம்.முன்னோடிகளின் மெட்டுக்கள் இனிமையாக இருப்பினும் வாத்திய அமைப்பில் போதாமையையும் காண்கிறோம்.  மெல்லிசைமன்னர்களின் இசை வசீகரத்தின் ஆதாரமே புதிய, புதிய இசைக்கருவிகளை மிக நுட்பமாக பயன்படுத்தியது தான் என அடித்துக் கூறலாம்.எளிமையும் ,கவர்ச்சியும் வனப்பும் ,கனிவும் மிக்க மாயக்கலவையாக அவர்களது இசை இருந்தது. […]