திருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் (முக்கோணநாதர்) திருக்கோவில்
அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் கேக்கரை எனுமிடத்தின் அருகில் திருப்பள்ளி முக்கூடல் என்ற ஊரில் அமைந்துள்ளது. தலவரலாறு: 1000-2000 ஆண்டுகள் பழமையான சிவாலயமாகும். கங்கை, யமுனை, சரஸ்வதி என மூன்று நதிகள் சந்திக்கும் இடமாகும் என்பது ஐதீகம், இத்தலம், ஜடாயுவுக்குச் சிவபெருமான் காட்சி தந்த தலமாகவும், முக்தித் தலமாகவும் போற்றப்படுகிறது. தலசிறப்புகள்: மூலவர்: முக்கோணநாதர், திரிநேத்திர சுவாமி, முக்கண் நாதர், முக்கூடல் நாதர்.தாயார்: அஞ்சனாட்சியம்மை, மைம்மேவு கண்ணி. தலவிருட்சம்: வில்வம், தீர்த்தமாக முக்கூடல் தீர்த்தம் (கங்கை, யமுனை, சரசுவதி நதிகள் கூடுவதாக […]




