திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் திருக்கோவில்
அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரிலிருந்து சுமார் 19 கி.மீ தொலைவிலும், திருநெல்லிக்காவலிலிருந்து 2 கி.மீ தொலைவிலும் உள்ள திருத்தங்கூரில்அமைந்துள்ளது. தலவரலாறு: ஒரு சமயம், உலகில் பிரளயம் ஏற்பட்டு பூவுலகம் முழுவதையும் கடல் நீர் மூழ்கடித்துக்கொண்டிருந்தது. இத்தலத்தில் விருப்பமாக எழுந்தருளியிருந்த உமாதேவி, சிவபெருமானிடம் தனக்கு மிகவும் விருப்பமானதும், அடியார்கள் நிரம்பியுள்ளதுமான இத்தலத்தை மட்டும் பிரளயம் விழுங்காமல் காத்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தார். சிவபெருமானும் உமையின் விருப்பத்திற்கிணங்க இத்தலத்தின் பெருமையை உலகறியும் பொருட்டு காத்தருளினார். அதன்படி, உலகம் முழுக்க கடல் […]




