உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை மாற்றம்
இலங்கையின் பல பிரதேசங்களில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை “அவதானம் செலுத்த வேண்டிய” மட்டத்தில் இருக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பம் 39 பாகை செல்சியஸ் முதல் 45 பாகை செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என்று அந்தத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்தார். நிலவும் கடும் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய […]




