Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

உடல் நலம்

வெந்தயம் ஒரு மாமருந்து –  மருத்துவம்

  • October 25, 2022
  • 0 Comments

வெந்தயம் ஒரு மாமருந்து என்று சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள். பேரிச்சம்பழம், பார்லி, அரிசி, வெந்தயம் ஆகியவற்றைத் தண்ணீரில் வேகவைத்து அதைத் தேனில் கலந்து லேசான சூடு இருக்கும்போது நோயாளிகளுக்கு அக்காலத்தில் அரபு நாட்டில் கொடுப்பார்கள். இஸ்லாமியர்களின் பிடித்தமான சமையல்களில் ஆட்டுக்கறி, வெந்தயக்கீரை, உருளைக்கிழங்கு கூட்டும் ஒன்றாகும். பொதுவாக சமையல் பொருளாக அனைவரின் பழக்கத்திலிருக்கும் வெந்தயத்தின் மருத்துவ குணங்களைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியாமல் இருக்கின்றது. நம் நாட்டில் அனைத்துப் பாகங்களிலும் […]

உடல் நலம்

வாய்ப் புண் Oral Ulcer என்றால் என்ன?

  • October 25, 2022
  • 0 Comments

வாய்ப்புண் (Mouth Ulcer) வாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மையாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதியே வாய்ப்புண் (மவுத் அல்சர்) என்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் “சுர்ர்” என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும். யாருக்கு வாய்ப்புண் ஏற்படும்?வாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியாக்களினால் ஏற்படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாயுள்ளவர்களை இது அதிகமாகத் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. குறிப்பாக விட்டமின் B12, இரும்புச் […]

இயற்கை – நிலம் – இசை

இயற்கை – நிலம் – இசை [ 5 ] T .சௌந்தர்

  • October 25, 2022
  • 0 Comments

பிற மொழிகளில் இயற்கை, நிலம் பற்றிய குறிப்புகள் காளிதாசன் கவிதைகள்: உலகெங்கும் இந்தியப்பண்பாடு என்றதும் முதலில் சமஸ்கிருதப்பண்பாடே தலைநீட்டும் அளவுக்கு அதற்கான பிரச்சாரம் மிகவும் கைகொடுத்துள்ளது. 17ம் நூற்றாண்டில் ஐரோப்பியர் இந்தியாவுக்கு வருகை தந்த போது ஆட்சியதிகாரங்களிலிருந்த பிராமணர்கள் சமஸ்கிருதம் தான் முதன்மையான மொழி என ஆங்கிலேயர்களுக்கு அறிமுகம் செய்தனர். அதுமட்டுமல்ல சமஸ்கிருதத்திலிருந்தே மற்றைய இந்திய மொழிகள் எல்லாம் கிளைத்தன எனவும், தத்துவம்,கலை, இலக்கியம், சமயம் எல்லாம் சமஸ்கிருத்தத்திலிருதே பெறவும்பட்டன என அவர்களை நம்பவும் வைத்தனர்.. சமஸ்கிருதம் […]

அறிந்து கொள்வோம்

உலக முட்டை தினம் இன்று! .

  • October 14, 2022
  • 0 Comments

1996 ஆம் ஆண்டு IEC வியன்னா மாநாட்டில் உலக முட்டை தினம் நிறுவப்பட்டது, அப்போது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினத்தை கொண்டாட முடிவு செய்யப்பட்டது. பல நூற்றாண்டுகளாக, உலகெங்கிலும் உள்ள குடும்பங்களுக்கு உணவளிப்பதில் முட்டைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மிகவும் மலிவு விலையில் பல்துறை மற்றும் உயர்தர புரதம் என்று வரும்போது அவை தோற்கடிக்க முடியாத தொகுப்பாகும். மேலும் அவை கோலினின் சிறந்த மூலமாகும், நினைவாற்றல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு அவசியம். முட்டைகள் […]

உடல் நலம்

ஓட்ஸ்… (Oats.) நிஜமாகவே நல்லது தானா??

  • October 9, 2022
  • 0 Comments

ஓட்ஸ் என்ற பெயருடைய தானியம் இன்றைய கால கட்டத்தில் ரொம்பவே பிரபலம். அரிசி கோதுமைக்கு அடுத்தபடியாக , ஓட்ஸுக்கும் , நம் வீட்டு சமையல் அறைகளில் ஒரு சிறப்பான இடம் உண்டு.  ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம்.. மேலும் நெடு நேரம் வரை பசி தாக்கு பிடிக்கவல்லது.. சர்க்கரை நோயால் வருந்துபவர்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது தான் இந்த ஓட்ஸ்…   ஓட்ஸ் நம் இருதயத்துக்கு மிகவும் நல்லது. கெட்ட கொழுப்பை குறைக்கவல்லது.சிறிது காலம் முன்பு வரை மேகி நூடுல்ஸ் எவ்வளவு பிரபலமாக […]

இயற்கை – நிலம் – இசை

இயற்கை – நிலம் – இசை[ 4 ] T .சௌந்தர்

  • October 9, 2022
  • 0 Comments

கவிதை, நாடகம் , சிற்பக்கலைகளும் சில குறிப்புகளும்… ஒவ்வொரு கலைக்கும் ஒவ்வொரு சிறப்பு இயல்புண்டு. தொன்மைக் காலத்திலிருந்து இயற்கையை அழகியலுடன் வெளிப்படுத்தியதில் நீண்டதொரு தொடர்ச்சியைக் கொண்டிருப்பது கவிதைக்கலை என்றால் மிகையில்லை. கவிதைகளின் பாடுபொருளில் கற்பனைகள் கலந்திருந்தாலும், நிலத்தோற்றங்கள் பற்றிய குறிப்புகளுடன் இணைத்தும் நோக்கியுள்ளனர் என்பதாலும் கவிதைக்கலை முக்கியத்துவம் பெறுகிறது. புகழ்பெற்ற மார்க்சிய விமர்சகரும், செயல்பாட்டாளருமான கிறிஸ்தோபர் காட்வெல், மாயையும் உண்மையும் [Illusion and Reality ] என்ற கட்டுரையில் கவிதையின் தோற்றம் பற்றி பின்வருமாறு கூறுவார் . […]

வானம் சிவந்த நாட்கள்

சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் >>>பகுதி 10

  • October 6, 2022
  • 0 Comments

“துரையை அடிக்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருந்தது. அதைச் செய்தவர்கள் அவர்களிருவருந்தாம். அவர்கள் இருவருடன் நாங்கள் நான்கு பேர்கள் சென்றது, எங்களுக்கிருக்கும் ஒற்றுமையால் தான். மேலும் மேலும் அய்யன் பெருமாளைப் பேசவைப்பதன் மூலம் மாடசாமியால் பெறமுடிந்த தகவல்கள் இவை. ஆக, தொழிலாளர்கள் அனைவரிடமும் துரைத்தனத்துக்கெதிராக அனல் பூக்கும் உணர்வுகள் அரும்பிவருகின்றன. மாடசாமி இதைத்தானே எதிர்பார்த்தார். உணர்வுகள் மலர்ந்து செயல்வடிவம் பெறுவது ஓரிருவர் கைகளில்தான். கண்டியில் நடைபெற்றுக் கொண்டிருந்த வழக்கு விசாரணை கொழும்புக்கு மாற்றப்பட்டது. தொழிலாளர்கள் முதலில் […]

அறிந்து கொள்வோம்

எதனால் அடிக்கடி பசி உண்டாகிறது?

  • October 5, 2022
  • 0 Comments

உடலின் செயல்பாட்டிற்கு சக்தி வேண்டும் என்பதன் வெளிப்பாடே பசி. பசி ஏற்படும் பொழுது வயிற்றில் ஒரு வித உணர்வு ஏற்படும். அதையே ‘பசி வயிற்றை கிள்ளுகின்றது’ என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுகின்றோம். அந்நேரம் சாப்பிடவில்லை என்றால் தலைவலிக்கும், எரிச்சல் வரும், எதிலும் கவனம் செலுத்த முடியாது. சிலருக்கு சாப்பிட்டு பல மணி நேரம் சென்றுதான் பசி ஏற்படும். ஆனால் இது எல்லோருக்கும் பொருந்தாது. பலருக்கு சரியாக காலை, மாலை, இரவு என்ற முறையில் பசி ஏற்படும். இதுவும் […]

கட்டுரைகள்

தொல்காப்பியத்தில் இயற்கை

  • September 30, 2022
  • 0 Comments

இயற்கை – நிலம் – இசை : 03 – T.சௌந்தர் தொல்காப்பியம் தமிழ் இலக்கணம், நிலம், இசை போன்றவற்றிற்கும் தனிச் சிறப்பு கொடுத்து எழுதப்பட்ட இலக்கண நூல் மட்டுமல்ல, கருத்துக்களை சுருக்கமாகவும் மதிநுட்பச் செறிவுடனும் சொல்லிச் செல்லும் திறனாய்வு நூலுமாகும். உலக இலக்கியங்களில் எங்கும் காண முடியாத “திணை” என்ற பொருளில் நிலங்களை வகுத்து, அவைக்குரிய இயற்கைப் பின்னணியையும், பண்களையும் , இசைக்கருவிகளையும், அந்நிலங்களில் வாழ்ந்த இசைக்கலைஞர்களையும், கலைவகைகளையும் விளக்கிச் சொல்லும் நூலுமாகும். தொல்காப்பியத்தில் இயற்கை: […]