Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

துயர்பகிர்வோம்

அமரர் சிவக்கொழுந்து துரைராஜா

யாழ். கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து துரைராஜா அவர்கள் 07-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற குழந்தைவேலு, பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலறஞ்சிதம்(சுசீலா) அவர்களின் பாசமிகு கணவரும்,

சுகர்ணா(கனடா), துஷ்யந்தி(ஜேர்மனி), றோஜனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கண்ணன்(கனடா), முகுந்தன்(ஜேர்மனி), திலீபன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஷாமலி, கேதாரன், மானஷா, ஞானஷி, கஜலோன், வரோதயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, மகேஸ்வரி, செல்வமாணிக்கம், பத்மாவதி மற்றும் நற்குணம், ராசபூபதி, கௌசலாதேவி, கஜேந்திரராணி, ராஜ சுலோசனா, விஜயராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தங்கேஸ்வரன், கெங்கேஸ்வரராஜா(கனடா), புவனேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற பொன்னம்பலம், பொன்னம்மா, தெய்வேந்திரம், செல்வானந்தம், செல்லையா, தம்பிராஜா மற்றும் செல்வபாக்கியம், இந்திராணி, சர்வானந்தம், துரைராஜா, ராஜேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-08-2022 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கொம்மந்தறையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மயிலியதனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுகர்ணா- கண்ணன் – மகள்

துஷியந்தி- முகுந்தன் – மகள்

திலீபன்- றோஜனா – மகள்

கெங்கேஸ்வரராஜா – மைத்துனர்

You may also like

துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் சின்னய்யா அழகேந்திரன்

கொம்மந்தரை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்.வசிப்பிடமாகவும் கொண்ட சின்னய்யா அழகேந்திரன் 07.04.2021 புதன் கிழமை அன்றுகாலமானார். அன்னார் காலம் சென்ற சின்னய்யா தெய்வயானைதம்பதிகளின் அன்பு மகனும்.காலம் சென்ற ராசரத்தினம் தங்கராசாத்தி
துயர்பகிர்வோம்

துயர் பகிர்தல் துஷ்யந்தி நவநாதன்

கட்டுவன், தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28.2.21 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,