Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

படைப்பாக்கம்

நீயும் ஓர் தாயே !

உன்னை வாழ்த்தி வணங்குவோம்
நீயும் ஓர் தாயே!

வலிசுமந்து வேதனைப்பட்டு
பெற்ற பிள்ளையை தாங்கும்
முதல் தாயே நீ வாழ்க !

குருதிகலந்து மூடிப்பிறக்கும்போது
மனம் சுழிக்காமல் கழுவித்துடைத்து
கையில் ஏந்தி தாயிடம் கொடுக்கும்
அன்புத்தாயே நீ வாழ்க !

பக்குவமாய் பணிவிடை செய்து
ஒருதாய்போலே மகப்பேற்றில்
நீ செய்யும் தொண்டு சேவை மகத்தானது
பிறக்கின்ற குழந்தைக்கு நீயும்
ஒரு பெறாத்தாயே நீ வாழ்க !

வெள்ளை உடையணிந்து
மகத்தான கடமை செய்து
பலரிடம் பாராட்டப் படுகிறாய்
போற்றப்படுகிறாய் நீ வாழ்க தாயே !

மகப்பேற்றில் தாய் இறக்கலாம்
பிள்ளை இறக்கலாம்
அப்போது உறவுகளிடம் செய்தி சொல்லி -நீயும்
கண்ணீர் வடிக்கிறாய்
நீயும் தாய்தானே நீவாழ்க தாயே !

உறவில்லாத உறவாகி உதவும் உன்குணம்
கண்டு பலரோடு மனதில் பாசமாகியே
போகின்றாய் நீ வாழ்க தாயே !

உயிர்காக்கும் வைத்தியருக்கு
உதவியாய் நீ இருந்து
உதவும் உன்சேவை தொண்டு
இறைவன் தொண்டு நீ வாழ்க தாயே !

அன்புகலந்த ஆறுதலான பேச்சால்
வலியும் நோயும் தீர்ந்தே போகும் நீ வாழ்க தாயே !

நீ பலரது இல்லங்களில் மனங்களில்
தெய்வமாகவே வாழ்கிறாய்
புனிதமான தொண்டாற்றும் உன்னை
வாழ்த்திவணங்குவோம் நீயும் ஓர் தாயே !

(கவியாக்கம் :கவிஞர் பாடகர் ,மயிலையூர்.இந்திரன் 29-01-2023)

You may also like

படைப்பாக்கம்

என் கவிதை

  • December 30, 2021
தாய் மடி ஆக்கம்: Mrs. Jeyalukshmy. Kanthasamy அலை வந்து அணைத்து மீளும் அழகான தீவு அது, இந்துவின் நித்திலமாய் இலங்குமென் தாய்நாடு இறைவன் எனக்களித்த இன்பவீடாம்
படைப்பாக்கம்

அள்ளிக் கொடுக்க வேண்டாம் கிள்ளியேனும் கொடு !

உள்ளதை உரக்க சொல்லலாம் -அதுஉயர்வுள்ளவன் செய்யும் செயல்நல்லதை சிறக்கச் செய்யலாம்-அதுவும்நாலு பேருக்கு நன்மை தரும் பணி ஆண்டவன் தந்த அறிவினை கொண்டுஆற்றலை பெருக்கி சிந்தித்து பார்!உழைப்பவன் அரைவயிற்று