திருநாட்டியத்தான்குடி மாணிக்கவண்ணர் திருக்கோவில்
- BY ssachid
- March 28, 2026
- 0 Comments
- 14 Views


அமைவிடம்:
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரிலிருந்து 15 கி, மீ, தொலைவிலுள்ள நாட்டியத்தான்குடி எனுமிடத்தில் அமைந்துள்ளது.
தலவரலாறு:
ரத்னேந்திரன் என்ற சோழ மன்னனும் அவனது சகோதரனும் சிவனின் தீவிர பக்தர்கள். அவர்களின் பெற்றோர் இறந்தவுடன், சகோதரர்கள் ஏராளமான வைரங்கள் மற்றும் ரத்தினக் கற்களைப் பெற்றனர். அவர்கள் இதை சமமாக மதிப்பில் பகிர்ந்து கொள்ள விரும்பினர், எனவே அவர்கள் நிபுணர்களின் உதவியை நாடினர். ஆனால் மதிப்பீட்டாளர்கள் எவராலும் ரத்தினங்களை சகோதரர்களுக்கு சமமாகப் பிரிக்க முடியவில்லை.
இறுதியில், இருவரும் சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தனர். இறைவன் ஒரு வைர வியாபாரியின் வேடத்தில் நிலத்திற்கு வந்து ரத்தினக் கற்களை இரண்டு சகோதரர்களிடையே சமமாகப் பிரித்தார். நன்றியின் அடையாளமாக, ரத்னேந்திரர் இந்த கோவிலைக் கட்டினார், மேலும் இங்குள்ள சிவன் ரத்னபுரீஸ்வரர் அல்லது மாணிக்கவண்ணர் என்று அழைக்கப்படுகிறார்.
தலசிறப்புகள்:
மூலவர்: மாணிக்கவண்ணர், இரத்தினபுரீசுவரர், கரிநாலேசுவரர், நாட்டியத்து நம்பி
தாயார்: மங்களாம்பிகை
தலவிருட்சம்: வாகை.
தீர்த்தமாக சூரிய தீர்த்தம், கரிதீர்த்தம் உள்ளது.
சுந்தரரால் பாடல்பெற்ற திருத்தலம் .
சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது, இறைவனார் அம்பிகையுடன் உழவனாக நாற்று நட மறைந்து சென்றுவிட, விநாயகப் பெருமான் சுந்தரருக்கு இறைவனார் இருக்கும் திசை காட்டி உதவியதால் கைகாட்டி விநாயகரானார் சுந்தரரும் அங்கு சென்று பாடல் பாடி
“நட்ட நடாக்குறை நாளை நடலாம்
நாளை நடாக்குறை சேறுதங்கிடவே
நட்டது போதும் கரையேறி வாரும்
நாட்டியத்தான்குடி நம்பி.”
என இறைவனை அழைத்து அருள் பெற்றார். இது கோட்புலி நாயனாரின் அவதாரத் தலமாகும். அவரின் இரு புதல்விகளான சிங்கடி, வனப்பகை இருவரையும் சுந்தரர் தம் புதல்விகளாக ஏற்ற தலம். அதனால்தான் சுந்தரர் தன் தேவாரப் பாடல்களில் தன்னை சிங்கடி அப்பன், வனப்பகை அப்பன் என்று குறிப்பிடுகிறார்சுந்தரரின் உற்ற நண்பராக இருந்த கோட்புலி நாயனாருக்கு இக்கோவிலில் உருவச்சிலை அமைத்து சோழர்கள் போற்றியுள்ளனர். கி.பி.10ஆம் நூற்றாண்டில் அவருக்கு எடுக்கப்பட்ட அந்த உருவச்சிலை 2003இல் கண்டெடுக்கப்பட்டது.
நின்ற கோலத்தில் உள்ள கோட்புலியார் தோளில் உள்ள ஒன்றியை அணைத்த வண்ணம் இறைவனை வணங்கும் கோலத்தில் உள்ளது. இப்பகுதியில் சுற்றித் திரிந்த ஒரு யானை, சிவனை வழிபடும் வகையில், தன் தந்தங்களைப் பயன்படுத்தி நீர் பாய்ச்சியது. இதுவே பின்னர் கோவில் தீர்த்தமாக மாறி கரி (யானை) தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இதனால் இங்குள்ள சிவனுக்கு காரி நாதேஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
மையக் கோவில் சோழர் காலத்தைச் சேர்ந்தது என்பதும் கோவிலில் உள்ள கல்வெட்டுகளால் சான்றளிக்கப்பட்டது. இருப்பினும், இன்று காணப்படும் பெரும்பாலான கட்டமைப்பு கோவில்கள் (குறிப்பாக வெளிப்புறங்கள்) சுமார் 200 ஆண்டுகள் பழமையானவை, விவசாயம் செழிக்கவும், இறைவனும் விவசாயத் தொழிலைக் காப்பவர் என்பதை உணர்த்தவும் இங்கு ‘நடவு திருவிழா’ வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
சிவார்ப்பணம்
ஆக்கம்: திரு நாகரத்தினம் புஸ்பநாதன்





