Stay Tuned!

Subscribe to our newsletter to get our newest articles instantly!

சமையல் குறிப்புகள்

அருமையான சுவையுடன் கூடிய பூண்டு பொடியை எப்படி செய்வது

தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,

பூண்டு – 1/2 கப்,
உளுத்தம் பருப்பு – 1/4 கப்,
துருவின தேங்காய் – 1/4 கப்,
தனியா – ஒரு டேபிள் ஸ்பூன்,
வரமிளகாய் – 10,
சீரகம் – 1 டீஸ்பூன்,
பெருங்காயப் பொடி – 1/4 டீஸ்பூன்.

செய்முறை

பூண்டை தோல் உரித்து நசுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள பூண்டுகளை போட்டு நன்கு சிவக்க வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை போட்டு சிவக்க பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இதேபோல் துருவிய தேங்காயை போட்டு வறுத்து எடுத்து அதனுடன் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் தொடர்ந்து மல்லி விதையை(தனியா) வறுக்கவும், இதை எடுக்காமல் அப்படியே வர மிளகாய்களை சேர்த்து வதக்கவும். வர மிளகாய் நன்கு வறுபட்டதும், ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சீரகம் இரண்டு பிரட்டு பிரட்டி அடுப்பை அணைத்து விடவும்.

இப்போது கால் ஸ்பூன் அளவிற்கு பெருங்காயப் பொடி சேர்த்துக் கொள்ளுங்கள்.

அனைத்தையும் நன்றாக ஆற வைத்து மிக்சியில் போட்டு கொர கொரவென்று அரைத்துக் கொள்ளுங்கள்.

சூப்பரான பூண்டு பொடி ரெடி.

பூண்டு பொடியை இட்லி தோசை போன்ற டிபன் வகைகளுக்கு சைட்டிஷ்சாக வைத்து சாப்பிடலாம். சட்னியே உங்களுக்கு தேவைப்படாது.

இட்லி பொடியை விட பூண்டு பொடி அட்டகாசமாக இருக்கும். ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த பூண்டு பொடி ஒருமுறை செய்து பிரிட்ஜில் வைத்து விடுங்கள். பிரிட்ஜில் வைத்து விட்டால் 15 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்.

You may also like

சமையல் குறிப்புகள்

வெந்தயக்குழம்பு செய்வோம் (Venthaya kulampu)

  • September 7, 2021
உடல் சூட்டால் வருந்துபவர்களுக்கு வெந்தயக் குழம்பு (Venthaya kulampu) மிகச் சிறந்த மருந்தாகும்.வெந்தயகுழம்பு (Venthaya kulampu) உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு , வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளையும் நீக்கும்.வெந்தயத்தில்
சமையல் குறிப்புகள்

4 வகை யாழ்ப்பாணத்து சொதி..

  • September 9, 2021
4வகை யாழ்ப்பாணத்து சொதி யாழ்ப்பணத்தில் சோதி என்றால் உடனே இடியப்பம் தான் நினைவில் வரும்.இடியப்பம்,புட்டு உடன் சோதி சேர்த்து சாப்பிட்டால் அதன் சுவையே தனி.அதுவும் 4 வகை